Saturday 30 July 2011

பாடல் முப்பத்து நான்கு ~~~~~~

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் !

தந்தே பரிவொடு தான்போ இருக்கும் சதுமுகமும் !

பைந்தேன் அலங்கல் பருமணி யாகமும் பாகமும்பொன் !

செந்தேன் மலரு மலர்கதிர் ஞ்சயிரும் திங்களுமே !

<பொருள்>
அபிராமி தன்னிடம் வந்து அடைக்கலம் அடையும் அடியவருக்கு 
பொன் உலகபதவியை அன்புடன் தருவாள் ,தந்து , தான் சென்று 
நான் முகனின் நான்கு முகங்களிலும் , மற்றும் பசிய தேன்சிந்தும் 
துளசிமாலை சூடிய கௌத்துவ மணி அணிந்த திருமாலின் மார்பிலும் 
சிவபெருமானின் இடபாகத்திலும் , செந்தேன் சிந்தும் தாமரை மலரிலும் 
பரந்த கதிரிகளையுடைய கதிரவனின் ஒலிகய்டையிலும் 
திங்களின் குளிர்ச்சியிலும் இருப்பாயாக ! 


பாடல் முப்பத்து மூன்று ~~~~~~

இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க !

அழைக்கும் பொழுது வந்து அஞ்சேல் என்பாய் அத்தர் சித்தமெல்லாம் !

குழைக்கும் களப குளிமுளையாமலை கோமளமே !

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே !

<பொருள்>
எம்பெருமானின் உள்ளமானதை உருக செய்யும் சந்தன கலவை பூச பெற்ற 
குவிந்த கொங்கைகளையுடைய யாமளை என்ற மென்மையானவளே !
விதித்த விதியின் படி கொள்ள வரும் எமன் எனை நடுங்க செய்து 
அழைக்கும் போது , நீ எழுந்தருளி , நீ அஞ்ச வேண்டா : என்று அருளுவாயாக ... நான் துன்பம் அடையும்போது வேறு எவரையும் நாடாமல் , தாயே ! என்று உன்னையே நாடி ஓடிவருகிறேன் !...



Friday 29 July 2011

பாடல் முப்பது இரண்டு ~~~~~~~~~~~~

ஆசை கடலில் அகப்பட்ட அருளற்ற அந்தகன் கை !

பாசத்தில் அல்லற்படவிருந்தேனை நின் பாதம் என்னும் !

வாச கமலம் தலைமேல் வலியா வைத்து ஆண்டு கொண்ட!

நேசத்தை என்சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே !

<பொருள்>
என் இறைவனான சிவபெருமானின் இடபாகத்தில் எழுந்தருளி இருக்கும் 
நல்ல அணிகளை அணிந்த தாயே ! ஆசை என்ற கரை இல்லாத கடலில் துரும்பு போல அகப்பட்டு . அதன் காரணமாக இறப்பு உண்டாகும் காலத்தில் , அருள் இல்லாத எமனின் கைபாகத்தில் அகப்பட்டு துன்ப பட 
இருந்தேன் . இத்தகைய என்னை நின் திருவடி என்ற நறுமணம் உடைய 
தாமரையை வலிய என் தலை மீது சூட்டி அருளி என்னை ஆட்கொண்ட பெருங்கருணையை என்னவென்று சொல்வேன் !!!!!!?


Sunday 24 July 2011

பாடல் முப்பத்து ஒன்று~~~~~

உமையும் உமையொரு பாகனுமே குருவில் வந்திங்கு !

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத் தாரினி எண்ணுதற்கு !

சமயங்களுமில்லை ஈன்றுடுப்பார் ஒரு தாயுமில்லை !

அமையு மமையுறு தோனியர் மேல் வைத்த ஆசையுமே !

< பொருள்>

     உமையும் அந்த உமையை இடபாகத்தில் கொண்ட சிவபெருமானும் ஒரே வடிவில் வந்து ஒன்றுக்கும் பற்று இல்லாத என்னை தன்னிடம் பற்று கொள்ளும்படி செய்து தடுத்தாட் கொண்டனர் . இனி நாம் போய் 
நற்கதி அடைவதற்கு வழி எது என்று ஆராய்வதற்கு சமையங்களும் இல்லை . நான் வீடு பேற்றை அடைய போவது உறுதி .
இனி என்னை ஈன்றெடுக்கும் தாயானவள் இல்லை ஆதலால் .
மூங்கில் போன்ற தோளை உடைய பெண்டிர்மீது வைக்கும் ஆசை இனி போதும் !

Wednesday 20 July 2011

பாடல் முப்பது ~~~~~

அன்றே தடுத்தென்னை ஆண்டு கொண்டாய் கொண்ட 
                                                                    வென்கை !

நன்றே உனக்கினி நானென் செயினும் நடுகடனுள் !

சென்றே விழினும் கரையேற்று கை நின் திருவுளமே !

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே !
<பொருள் >
ஒருவடிவாய் விளங்குபவளே !பல வடிவங்களையும் விளங்குபவளே !
வடிவம் இல்லாத அருவமாய் விளங்குபவளே !என் அன்னையான உமையவளே !
முன்னர் ஒருநாள் எனை தடுதாட்கொண்டாய் ,அவ்வாறு தடுதட்கொண்டதை இல்லை என 
கூறுதல் நியாயமா உனக்கு ?இனி நான் என்ன செய்தாலும் , கடலின் நடுவில் போய் விழுந்தாலும் !
என் குற்றத்தை மறந்து என்னை கரை ஏற்றுதல் உன் திருவுள பாங்கை பொருத்ததாகும் !..... 



 

Sunday 17 July 2011

இருபத்தி ஒன்பதாம் பாடல் ~~~~

சித்தியும் சித்தி தரும் தெய்வமாகி திகழும் பரா !


சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவமுயல்வார் !

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைதெழுந்த!

புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே ! 

.                                                                         <பொருள் >


எட்டு வகை பட்ட சித்தியும் அவற்றினை அளிக்கும் தெய்வமாகி நிற்கும் 
பராசக்தியும் . ஆகி ..அந்த பராசக்தி தன்னிடம் பொருந்த செய்துள்ள சிவமும் 
தவத்தை இயற்றுபவர் அடையும் முக்தி இன்பமும் , முக்தியை பெறுவதற்கு 
மூலமும் , அந்த முலத்தை அறியும் அறிவும் . இவை எல்லாமுமாக இருப்பவள் 
அறிவில் நின்று பாதுகாக்கும் திருப்புற சுந்தரி நாம் எல்லோரையும் காக்கட்டும் ..




Thursday 14 July 2011

இருபத்தி எட்டாம் பாடல்~~~~~

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் !


புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர்த்தாள் !

அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியவரசும் !

செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே ! 
<பொருள் >

காவியத்திலும் கவிதையிலும் வரும்,, சொல்லும் அதன் பொருளும் போன்று 
என்றும் இணைபிரியாது ஆனந்த கூத்து இயற்றும் உன் துணைவனான சிவபெருமானுடன் ,
பொருந்தியுள்ள நறுமணம் உடைய பூங்கொடி போன்றவளே ,!  புதிய மலரை போன்று 
எபோதும் உள்ள உன் திருவடிகளை அல்லும் பகலும் தொழும் அடியவர்களுக்கு ,
பகைவர்களால் அழிவு வராத அரச செல்வமும் பயன் தரும் முறையில் செல்லும் 
தவ வாழ்வும் இறுதியில் சிவலோக பதவியும் கிடைக்க பெறும்!





Saturday 2 July 2011

இருபத்தி ஏழாம் பாடல் ~~~~~

உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகுமன்பு!

படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணிஎனக்கே !

அடைத்தனை நெஞ்சதழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்!

துடைத்தனை சுந்தரி நின்னருளேது என்று சொல்லுவதே !

<பொருள்>

பேரழகு உடையவளே ! வஞ்சகமாக யான் அறியாமல் என்னை துன்புறுத்தும் 
பிறவி குவியலை அழித்தாய் . அதற்ககு முன் உள்ளம் உருகும் அன்பை அடியேன் பெறும்படி செய்தாய் ! நின் தாமரை மலர் போன்ற திருவடிகளை 
எளியேன் சூடி கொள்ளும் படியான பணியை எனக்கு அருளினாய் 
என் மனதில் உள்ள அழுக்கை எல்லாம் நின் அருள் என்ற தூய்மையான
 நீரால் கழுவினாய் தூய்மை செய்தாய் ! இவளவுக்கும் காரணமான உனதருளை என்னவென்று கூறுவது!.................






Tuesday 28 June 2011

இருபத்தி ஆறாம் பாடல் ~~~~~

ஏந்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் !

காத்தும்! அழித்தும் , திரிபவராம் கமழ் பூங்கடம்பு !

சாத்தும் குழலனங்கே மணநாறு நின்தாளிணைக்கே என் !

நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே !

<பொருள்>

நறுமணம் கமழும் கடம்ப நறுமண மலர்களை அணியும் கூந்தலையுடைய 
தெய்வ பெண்ணே ! நின்னை துதிக்கும் அடியவர் பதினான்கு படைத்தும்
காத்தும் அழித்தும் விளங்கும் மும்மூர்த்திகலாவர் . அங்ஙனமாக மணம்
வீசும் நின் இரண்டு திருவடிகளுக்கு எளியவனான என் நாவில் தங்கிய 
பொலிவற்ற சொற்கள் ஏற்படுயதாக செயல் சிரித்தற்கு இடமாய் உள்ளது !

Thursday 23 June 2011

இருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~

பின்னே திரிந்துன் அடியாரை பேணி பிறப்பறுக்க !

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதன் மூவருக்கும் !

அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே !

என்னே இனியுன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே !

<பொருள்>

முதற்கடவுளான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே !உலகத்து உயிர்களின் 
நன்மையின் பொருட்டு அபிராமி எனப் போற்ற பெறுகின்ற அருமருந்தாய் 
விளங்குபவளே !உன்னை நான் மறவாமல் என்றும் துதிப்பேன் !
இனிமேல் எனக்கு என்ன கவலை ? இத்தகைய பேரு எனக்கு வாய்த்ததிற்கான காரணம் யாது ? நின்னடியாரின் பின்னால் திரிந்து 
அவர்களை போற்றி பிறப்பை அறுப்பதற்கு தக்கபடி முன் பிறவியில் 
தவத்தை ஆற்றி உள்ளேன்!......



இருபத்தி நான்காம் பாடல் ~~~~~~

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த !
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதாவர்க்கு !

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே !

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே !

<பொருள்>

மாணிக்கம் போன்றவளே ! மணியில் பொருந்திய ஒளி போன்றவளே !
விளங்கும் உயர்ந்த மணிகளால் இயற்ற பெற்ற அணி போன்றவளே !
அணிந்து கொள்ளும் அணிகளுக்கு அழகாக விளங்குபவளே !
நின்னை அணுகாதர்வற்கு நோய் போன்றவளே !பிறவி என்ற நோய்க்கு மருந்தாக விளங்குபவளே !தேவர்க்கு பெருவிருந்தாக விளங்குபவளே !
நின் தாமரை பாதங்களை வணங்கிய பின் வேறு ஒருவரையும் வணங்க மாட்டேன் !


Wednesday 22 June 2011

இருபத்தி மூன்றாம் பாடல் ~~~~~

கொள்ளேன் மனதினில் கோலம் அல்லது என்பர் கூட்டந்தன்னை !

விள்ளேன் பராமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு !

குள்ளே அனைதினிர்க்கும் புறம்பே உள்ளதே விளைந்த!

கள்ளே களிக்கும் கலியே அளியே என் கண்மணியே !

<பொருள்> 

பரந்த மூவுலகங்களுக்கு உள்ளும் அந்தர்யாமியாய் உள்ள அன்னையே !
எல்லா உலகங்கங்களுக்கும் அப்பாற்பட்டு விளங்குபவளே !
உள்ளத்தில் இன்பத்தை விளைவிக்கும் கள்போன்றவளே !
அக்கள்ளால் களிக்கும் களிப்பை விளங்குபவளே !எளியவனான என் கண்ணில் உள்ள மணி போன்றவளே ! யான் நின்னையே அல்லாமல் 
வேறு உருவத்தை தியான பொருளாக மனதில் கொள்ள மாட்டேன் !உன் 
அன்பர்கள் கூட்டத்தை என்றும் பிரிந்து நில்லேன் .... பிற சமயங்களை விரும்ப மாட்டேன் !

கொடியே இளவஞ்சி கொம்பே எனக்கு வம்பேபழுத்த  !

படியே மறையின் பரிமளமே பனிமால் இமய !

பிடியே பிரமன் முதலாய தேவரைப்  பெற்ற அம்மே !

அடியேனி றந்து இங்கினிப் பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே!

<பொருள்>

பொன்கொடி போன்றவளே ! இளைய வஞ்சி கொம்பு போன்றவளே !
தகுதி இல்லாத எனக்கு தானே வந்து அருள் அளித்த கனியே !
வேதமான மலரில் பரவிய மணம் போல விளங்குபவளே !
பனியை உடைய பெரிய இமய மலையில் தோன்றிய பிடி போன்றவளே !
நான் முகன் முதலிய தேவரை பெற்றெடுத்த தாயே !அடியவன் இவ்வுலகத்தில் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே !

Tuesday 21 June 2011

இருபத்தி ஒன்றாம் பாடல் ~~~~~~


மங்கலை செங்கலை சம்முலையால் மலை யால்வருண !

சங்கலை செங்கை சகல கலாமயில் தாவு கங்கை !

பொங்கலை தாங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்!

பிங்கலை நீலி செய்யாள் வெளி யால்பசும் பெண்கொடியே !

<பொருள்>
அபிராமி மங்கள் வடிவுடையவள் செம்மையான குடம் போன்ற கொங்கைகள் உடையவள் !மலையின் மகள் !பல வண்ணங்கள் உடைய வளையல் அணிந்தவள் ; எல்லா கலைகளுக்கும் தலைவியான மயில் போன்றவள் !
பாயும் கங்கையில் பெருகும் அலைகள் அமைதியாய் தூங்க புரிந்த ,
சடையுடைய சிவபெருமானின் ஒரு பக்கத்தை தனக்கே உரியதாய் கொண்டு 
ஆள்கின்ற உரிமை உடையவள் . பொன்னிறம் வாய்க்க பெற்றவள் 
நீல நிறம் உற்றவள் . வெண்மை நிறம் கொண்டவள் . பசுமையான கொடி போன்றவள் ...




Sunday 19 June 2011

இருபதாம் பாடல்~~~~~

உறைகின்ற நின்திரு கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ !

அறைகின்ற நான் மறையின் அடியோ ! முடியோ ! அமுதம் !

நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ ! என்றன் நெஞ்சகமோ !

மறைகின்ற வாரிதியோ ! பூரணாசல மங்கலையே ! 

<பொருள்>

எங்கும் நிறைந்தவளையும் தளர்ச்சி அற்றவளாயும்  உள்ள மங்கலமான அபிராமியே ! நீ விற்று இருக்கின்ற நின் திருகோவிலில் நின் கணவர் 
சிவபெருமானின் இடபாகமோ ? உன்னை துதிக்கின்ற வேதங்களின் மூலமான பிரணவமோ ? அந்த வேதங்களின் உச்சியான 
உபநிடந்தன்களோ ? அமுதம் நிறைந்துள்ள வெண்மையான சந்திரனோ ?
தாமரை மலரோ ? என் உள்ளமோ ?அனைத்தும் மறைவதற்கான கடலோ ?
 பூரணம் நிறைந்த என் மங்கலையே .. உன்னை வணங்குகிறேன் !!!!


பத்தொன்பதா ம் பாடல்~~~~~

வெளிநின்ற நினதரு மேனியை பார்த்து என் விழியுநெஞ்சும் !

களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே !

தெளிநின்ற ந்ஜனம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ !

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பது மேனி உறைபவளே !

<பொருள்>
ஒளியுடைய ஒன்பது கோணங்களில் விற்று இருக்கின்ற  தாயே !
புறத்தில் யாவரும் எழுந்தருளிய நின் அழகிய கோலத்தை தரிசித்து 
என் கண்களும் மனமும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு கரைகாண முடியாது . ஆயினும் என் உள்ளத்தில் தெளிந்த ந்ஜனம் உள்ளது .
இன்னும் என்ன என்ன அனுபவத்தை வழங்கவேண்டும் 
என்பது நின் திருவுள்ளமோ ?


Friday 17 June 2011

பதினெட்டாம் பாடல் ~~~~~

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்து இருக்கும் !

செவியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே !

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதம் ஆகிவந்து !

வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே !


<பொருள்>
அன்னையே !நீ கவர்ந்து கொண்ட இடபாகத்தை உடைய சிவபெருமானும் நீயும் கூடி மகிழ்து இருக்கும் நிலையில் உள்ள கோலமும் , உங்கள் திருமண கோலமும் , என் உள்ளத்தில் இருந்த அகந்தையை போக்கி என்ன உள்ளதை ஆண்ட உன் பொலிவுடைய  பொற்பாதம் எழுந்து வந்து 
கூற்றுவன் என்னை கவர வரும்போது அவன் காண வெளிவந்து நின்று ,
அவனால் வரும் துன்பத்தை போக்கி அருள வேண்டும் ! 

பதினேழாம் பாடல் ~~~~

அதிசய மான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் !

துதிசய வானன சுந்தர வள்ளி துணை இறுதி !

பதி சயமானது அபசய மாகமுன் பார்த்தவர்தம் !

மதிசய மாகவன்றோ வாம பாகத்தை வவ்வியதே !

<பொருள்>
அதிசயமான வடிவுடைய அபிராமி அம்மை , தாமரை மலர்கள் எல்லாம் துதிக்கும் , வெற்றி திருமுகமுடைய அழகு கொடியாவாள்,இரதியின் கணவனான காமன் பெற்ற வெற்றி தோல்வி அடையுமாறு, நெற்றி கண்ணால் சுட்டெரித்தவர் சிவபெருமான் . அத்தகையவரின் திருவுள்ளம் தன் வெற்றியாக மாற , அதனால் அன்றோ அம்மை ஆனவள் சிவனின் இடபாகம் பெற்றாள்.!

Tuesday 7 June 2011

பதினாறாம் பாடல் ~~~~~

கிளியே கிளைஜர் மனத்தே கிடந்து கிளர்தொளிரும் !

ஒளியே ஒளிகிட மெண்ணில் ஒன்றுமில்லா! 

வெளியே வெளிமுதர் பூதங்களாகி விரிந்த அம்மே!

அளியேன் அறிவள விற்கு அளவானது அதிசயமே !

<பொருள்> 
கிளி போன்ற தாயே ! அடியவரின் மனதில் நிலை பெற்று விளங்கும் ஒளியே !உலகத்தில் விளங்கும் ஒலிகளுக்கெல்லாம் எல்லாம் ஆதாரமான பொருளே ! நினைத்து பார்க்கும் போது எந்த தத்துவமும் ஆகாமல் யாவற்றையும் கடந்து நின்ற பரவெளியே ! வான் முதலிய ஐம்பெரும் பூதங்களாய் விரிந்துள்ள தாயே !இத்துணை பெரியவளான நீ 
இந்த எளியேனின் சிற்றறிவின் அடங்கியது வியப்பே ஆகும் ! 



Friday 3 June 2011

பதினைந்தாம் பாடல் ~~~~~

தண்ணளி கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வர்! 

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்மதி வானவர் தம் !

வின்னெளிக் செல்வமும் அழியாமுத்தி வீடும் அன்றோ !


பண்ணளிக்கும் சொற்பரிமல யாமளைப் பைங்கிளியே !

<பொருள்>
பண் போல பேசும் இனிய சொற்களும் சிறந்த நறுமணமும் உடைய 
ஷ்யாமளா தேவியான பசுங்கிளி போன்ற அன்னையே ! உன் குளிர்ந்த 
அருளை பெறுதற்காக முன் பிறவியில் பலகோடி தவங்களை செய்தவர்கள் 
இந்த உலகத்தை ஆள்கின்ற அரசுரிமை செல்வத்தை மட்டுமா பெறுவார்கள்?
அறிவை உடைய தேவர்களுக்குரிய இந்த்ர பதவியான செல்வத்தை 
பின் எக்காலத்தும் அழியாத முக்தியான வீட்டுல வாழ்கையும் பெறுவார்கள் 





Saturday 28 May 2011

பதினான்காம் பாடல்

வந்திப்பவர் உன்னை வானவர் தானவரானவர்கள் !

சிந்திப் பவர்னல் திசை முகர் நாரணர் சிந்தையுள்ளே !

பந்திப் பவரழி யாபரமானந்தர் பாரில் உன்னைச் !

சந்திப்பவர் கெலிதா மெம்பிரா ட்டினின் தண்ணளியே !

<பொருள் >

எம் தாயே ! நின்னை வணங்குபவர்கள் வானவரும் அசுரர்களும் ஆவார்கள் .
உன்னை மனதுள் தியானிப்பவர்கள் நல்லவரான நான் முகனும் 
நாராயணரும் ஆவர்கள் . தம் மனதுள் அன்பினால் பிணித்து இன்பம் 
அடைபவர் அழியாத பரமானந்தா  வடிவுடையா  சிவ பெருமான் 
ஆவார் . இத்துணை சிறப்பும் கொண்ட நின் திருவருள் . உலகத்தில் 
நின்னை  தரிசிப்பவர்க்கு எளிதாகின்றது !
இது என்ன வியப்பு !

Sunday 22 May 2011

பதிமூன்றாம் பாடல் ~~~~~

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் !

காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு !

மூத்தவளே என்றும்  மூவா முகுந்தற்கு இளையவளே !

மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே !

<பொருள் >

உலகங்கள் பதி நான்கையும் ஈன்றவளே !அருள் கொண்டு ஈன்ற அந்த பதினான்கு உலகங்களையும் காத்தவளே !பின் அவற்றை மறைத்து வைப்பவளே !நஞ்சின் கருமையை கழுத்தில் உடைய சிவபெருமானுக்கு முன் தோன்றிய தத்துவமாய் உள்ளவளே !என்றும் முதுமை அடையாத திருமாலுக்கு தங்கையே !பெருந்தவதினை உடையவளே !நான் உன்னை அல்லாது வேறு கடவுளை வழிபடுவது முறையாகுமா ?

பனிரெண்டாம் பாடல்

கண்ணியதுன் புகழ் கற்பதுநாமம் கசிந்துபத்தி !

பண்ணியந்துன் திரு பாதாம் புயத்தில் பகலிரவா!

நண்ணியதுன்னை நயந்தோர் அவயத்து நான் முன் செய்த!

புண்ணியமே எண்ணமே புவி ஏழையும் பூத்தவளே!

<பொருள் >
எம் அன்னையே உலகங்கள் ஏழையும் படைத்தவளே ! நான் எபோதும் நினைப்பது உன் புகழை ! பலகாலும் பயின்று உணர்வது உன் திருபெயரை!
மனம் கசிந்து பக்தி பண்ணியது உன் திருவடி தாமரைகளில் !
பகல் இரவாக சென்றடைய நின் அன்பரின் கூட்டத்தை !இவளவுக்கும் 
நான் செய்த புண்ணியம் யாது? 


Tuesday 10 May 2011

பதினோராம் பாடல்

ஆனந்த மாயின் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் !

வானந்த மான வடிவுடையான் மறை நான் கினுக்கும் !

தானந்த மான சரணார விந்தம் தவளநிறக் !

கானந்த ஆடரங்கா எம்பிரான் முடி கண்ணியதே !

<பொருள் >

ஆனந்த வடிவம் ஆகி , என் அறிவாகி , நிறைந்த அமுதம் போன்றவழகி .
வான் ,பூமி, போன்ற ஐயும் பூதங்களுக்கும் தன் வடிவாக கொண்டவள் அபிராமி , அந்த அற்புத அன்னை நான்கு மறைகளுக்கும் , முடிவாக நிற்கும் 
திருவடிகள் , வெண்மையான நிறம் கொண்ட தன் ஆடும் இடமாய் கொண்ட 
என் சிவபெருமானின் முடிக்கு மாலையாய் விளங்குகின்றன ! 

பத்தாம் பாடல்


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைபதுன்னை !

என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் ஏழு தாமரையின் !

ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து !

அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே !

<பொருள் >

எழுத படாத வேதத்தில் பொருந்திய அறிய பொருளே !
அருள் வடிவாக விளங்குபவளே ! உமையே ! முன்காலத்தில் இமய
 மலையில் பிறந்தருளிய பார்வதியே ! அழியாத முக்தி இன்பமே !நான் 
, நின்றவாறும் , நடந்தவாறும் படுத்தவாரும் துதிப்பது நின்னையே !

Wednesday 4 May 2011

ஒன்பதாம் பாடல் ....

கருத்தன எந்தைதன் கண்ணன வண்ண கனக வெற்பில்!
 .
பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்!

திருத்தன பாரமும் ஆரமும் செங்கை சிலையும் அம்பும்!

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்த என் முனிற்கவே !

<பொருள் >
என் அன்னையே ! எம் தந்தை சிவபெருமானின் உள்ளத்தில் உள்ளனவும் .
அவர்தம் கண்களில் உள்ளனவும் . அழுத சம்பதருக்கு பால் தந்த அருள் வாய்ந்த அழகிய . முத்து மாலை அணிந்த மார்பும் . சிவந்த திருக்கை இடத்தில் உள்ள கரும்பு வில்லும் மலர் அம்பும் . மயிலிறகின் அடியை போன்ற பற்களும் ஆகிய இவற்றை எல்லாம் உடைய நின் முழு திருகோலதுடன் வந்து என்முன் நின்று தரிசனம் அளித்தருளுக ...

Monday 2 May 2011

எட்டாம் பாடல் .....

சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் !

வந்தரி சிந்துர வண்ணத்தினால் மகிடன் தலைமேல் !

அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்!

கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என்கருதனவே !

<பொருள் >

பேரழகி , எம் தந்தையான சிவபெருமானின் தேவி , என் பாசமான 
விலங்கை எல்லாம் தன்னிடம் உள்ள அருளால் எழுந்தருளி வந்து 
அழிக்கும் சிந்துரம் போன்ற சிவந்த நிறம் உடையவள் , மகிஷாசுரனின் 
தலை மீது நிற்கும் அந்தரி ,நீல நிறம் கொண்டவள் , எக்காலத்தும் 
அழிவில்லா கன்னி தன்மை கொண்டவள் , நான்முகனின் கபாலத்தை 
தங்கிய திருகை கொண்டவள் ஆகிய அபிராமி அம்மையின் தாமரை 
மலர் போன்ற திருவடிகள் என்றும் என் உள்ளத்தில் உள்ளன !  

Sunday 1 May 2011

ஏழாம் பாடல்

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர் !

கதியொரு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் !

மதியொரு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் !

துதியொரு சேவடியாய் சிந்துராரண சுந்தரியே !  

<பொருள் >
தாமரையில் வீற்று இருக்கின்ற நான் முகனும் , பிறை சந்திரனை 
அணிந்த தலையை  உடைய நின் கணவனான சிவனும் ,திருமாலும் 
வணங்கி எபோதும் துதிக்கின்ற சிவந்த திருவடிகளை உடையவளே ,
செந்நிற திலகம் அணிந்த நெற்றியை உடையவளே !

தயிரில் சுழல்கின்ற மத்தினை போல் , பிறப்பு இறப்பு இடையே 
சுழலும் என் உயிர் , தளராத படி ஒரு நல்ல கதியை அடையுமாறு 
நீ.... திருஉள்ளம் கொள்ள வேண்டும் !. 

Saturday 30 April 2011

ஆறாம் பாடல்

சென்னியது உன்பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே !

மன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே!

முன்னிய நின்னடி யாருடன் கூடி முறைமுறையே !

பன்னிய தென்று முன் தன்பரமாகம பத்ததியே !

பொருள் 

செந்நிறமான திருமேனி உடைய பெருமாட்டியே ! அடியேனின் தலை மீது  பொருந்தி இருப்பது நின் அழகிய திருவடி தாமரை மலர் !
என மனதுள் பொருந்தி இருப்பது உன் தெய்வ தன்மை பொருந்திய மந்திரம் 
உன்னையே தியானம் செய்து வாழும் அடியாருடன் !
ஒன்று கூடி முறை முறையாக பாராயணம் செய்பவை நின் மேலான 
ஆகம நெறிகளாகும்!....

Friday 29 April 2011

ஐந்தாம் பாடல்.....


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்!

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்!

அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்!

திருந்திய சுந்தரி யந்தரி பாதமென் சென்னியதே ! 

<பொருள் >
பொருந்திய திருபுறங்களின் தலைவி . செப்பாய் உவமையாக கூறும் 
இரு கொங்கைகளின் சுமையினாலே வருந்திய வஞ்சி கொடி போன்ற 
இடையை உடைய மனோன்மணி . நீண்ட சடையை உடைய 
சிவபெருமான் முன்காலத்தே அருந்திய நஞ்சினை கழுத்தில் 
நிறுத்தி அமுதம் ஆக்கிய அன்னை . தாமரை மலர் மீது 
வீற்று இருக்கின்ற பேரழகி , பிரகாச வடிவுடையாள் 
ஆன அபிராமி அம்மையின் திருவடிகள் என் மீது உள்ளனவாகும் !



Thursday 28 April 2011

நான்காம் பாடல் ......

மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னி!

குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார்சடை மேல்!

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரிதியும் படைத்த!

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே !

பொருள் 

மனிதர் தேவர் இறவாத ஸ்ரிஞ்சீவி தன்மையுடைய முனிவர்கள் 
நெருங்கி வந்து தலை வணங்கும் சிவந்த அடிகளை உடைய 
கோமள வல்லியே ! கொன்றை மாலை சூடிய நீண்ட ஜடை மீது 
குளிர்ந்த இளம்பிறை சந்திரனும் , பாம்பும் , கங்கையும் ,
ஆகிய வற்றை அணிந்த தூயவரான சிவா பெருமானும் 
நீயும் . என் மனதுள் வந்து தங்கி அருள்வீராக !

Tuesday 26 April 2011

மூன்றாம் பாடல்....

அறிந்தேன் எவரும் அறிய மறையை அறிந்து கொண்டு .

செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப.
 
பிறிந்தேன் என் அன்பர் பெருமை என்னாத கரும நெஞ்சால் .

மறிந்தே விழு நர குக்குற வாய மனிதரையே !

பொருள் 
திரு மகளாய் விளங்குபவளே ! வேறு எவரும் அறியாத ரகசியத்தை 
நான் அறிந்து கொண்டேன் . அங்ஙனம் நான் அறிந்து கொண்டு 
நின் திருவடியை அடைக்கலமாக நான் அடைந்தேன் .
நின் அடியாரின் பெருமையை அறிந்து கொள்ளாத
தீவினை உடைய உள்ளம் காரணமாக நரகத்தில் விழும் ,
தொடர்புடைய மனிதரை கண்டு அஞ்சி விலகினேன் !

Monday 25 April 2011

பாடல் இரண்டு

துணையும் தொழு தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்!
 
பணையும் கொழுந்தும் பத்தி கொண்ட வெறும் பணிமலர்பூங்!
 
கணையும் கருப்புஞ் சிலையும் பாசாங்குசமும் கையில்!
 
அணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே !


திரிபுர சுந்தரி நான்கு கைகளிலும் குளிர்ந்த மலர் அம்புகளையும் 
கரும்பு வில்லையும் மென்மையான பாசம் அங்குசம் என்பனவற்றையும் 
கொண்டு விளங்குகிறாள் . அபெருமட்டியே எனக்கு துணையும் 
நான் வணங்கும் தெய்வமும் என்னை பெற்ற தாயும் 
வேதமான மரத்தின் கிளையாகவும் . அதன் தளிராகவும்
பொருந்திய வேராகவும் விளங்குகிறாள் . இதனை நான் அறிந்து கொண்டேன் !

Tuesday 12 April 2011

முதல் பாடல் ... செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இதை தினமும் சொல்ல நல்ல பலனாம் ........

உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம் உணர்வுடையோர்!
 மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை!
துதிக்கின்ற மின்கொடி மென்கடி குங்கும தோயம் என்ன !
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே !


தோன்றுகின்ற உதய சூரியன் .தலையின் உச்சியில் மங்கையர் வைத்து கொள்ளும் 
குங்கும திலகம் மனிதர்கள் மதித்து கொண்டாடும் மாணிக்கம் , மாதுளம் மலர் , தாமரை மலரில் வீற்றுருகின்ற திருமகள்  துதிக்கும் மின்னல் கோடி 
மென்மையான மனதை உடைய குங்கும கலவை நீர் என்று அடியார்கள் உவமையாக எடுத்து கூறும் 
திருமேனி உடைய அபிராமி அம்மை எனக்கு துணையாக இருப்பார் என்பது திண்ணம் ....... 
..

Wednesday 6 April 2011

காப்பு

தரமற் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை !
ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே உலேகேழும் பெற்ற !
சீர் அபிராமி அந்தாதி எபோதும் என் சிந்தையுள்ளே! 
காரமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே! 

<><>பொருள் <><>
மாலையாய் கட்ட பட்ட கொன்றையும் சண்பக மலர்மாலையும் 
அணிந்த தில்லையம்பதியில் உள்ள நடராசருக்கும் 
அவர் தம் இடப்பக்கத்தில் வீற்றிருக்கும் உமை அம்மையாருக்கும் 
தோன்றிய மைந்தனே !மேகம் போன்ற மேனியை உடைய 
கணபதியே ஏழ் உலகங்களையும் பெற்ற சிறந்த அபிராமி அம்மையாருக்கு 
அணியும் அந்தாதி எபோதும் என் மனதுள் பொருந்தி நிற்குமாறு அருளுவாயாக !!!!