Thursday 28 April 2011

நான்காம் பாடல் ......

மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னி!

குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார்சடை மேல்!

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரிதியும் படைத்த!

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே !

பொருள் 

மனிதர் தேவர் இறவாத ஸ்ரிஞ்சீவி தன்மையுடைய முனிவர்கள் 
நெருங்கி வந்து தலை வணங்கும் சிவந்த அடிகளை உடைய 
கோமள வல்லியே ! கொன்றை மாலை சூடிய நீண்ட ஜடை மீது 
குளிர்ந்த இளம்பிறை சந்திரனும் , பாம்பும் , கங்கையும் ,
ஆகிய வற்றை அணிந்த தூயவரான சிவா பெருமானும் 
நீயும் . என் மனதுள் வந்து தங்கி அருள்வீராக !

No comments:

Post a Comment