பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் !
காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு !
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே !
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே !
<பொருள் >
உலகங்கள் பதி நான்கையும் ஈன்றவளே !அருள் கொண்டு ஈன்ற அந்த பதினான்கு உலகங்களையும் காத்தவளே !பின் அவற்றை மறைத்து வைப்பவளே !நஞ்சின் கருமையை கழுத்தில் உடைய சிவபெருமானுக்கு முன் தோன்றிய தத்துவமாய் உள்ளவளே !என்றும் முதுமை அடையாத திருமாலுக்கு தங்கையே !பெருந்தவதினை உடையவளே !நான் உன்னை அல்லாது வேறு கடவுளை வழிபடுவது முறையாகுமா ?
No comments:
Post a Comment