Sunday 19 June 2011

இருபதாம் பாடல்~~~~~

உறைகின்ற நின்திரு கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ !

அறைகின்ற நான் மறையின் அடியோ ! முடியோ ! அமுதம் !

நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ ! என்றன் நெஞ்சகமோ !

மறைகின்ற வாரிதியோ ! பூரணாசல மங்கலையே ! 

<பொருள்>

எங்கும் நிறைந்தவளையும் தளர்ச்சி அற்றவளாயும்  உள்ள மங்கலமான அபிராமியே ! நீ விற்று இருக்கின்ற நின் திருகோவிலில் நின் கணவர் 
சிவபெருமானின் இடபாகமோ ? உன்னை துதிக்கின்ற வேதங்களின் மூலமான பிரணவமோ ? அந்த வேதங்களின் உச்சியான 
உபநிடந்தன்களோ ? அமுதம் நிறைந்துள்ள வெண்மையான சந்திரனோ ?
தாமரை மலரோ ? என் உள்ளமோ ?அனைத்தும் மறைவதற்கான கடலோ ?
 பூரணம் நிறைந்த என் மங்கலையே .. உன்னை வணங்குகிறேன் !!!!


No comments:

Post a Comment