அதிசய மான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் !
துதிசய வானன சுந்தர வள்ளி துணை இறுதி !
பதி சயமானது அபசய மாகமுன் பார்த்தவர்தம் !
மதிசய மாகவன்றோ வாம பாகத்தை வவ்வியதே !
<பொருள்>
அதிசயமான வடிவுடைய அபிராமி அம்மை , தாமரை மலர்கள் எல்லாம் துதிக்கும் , வெற்றி திருமுகமுடைய அழகு கொடியாவாள்,இரதியின் கணவனான காமன் பெற்ற வெற்றி தோல்வி அடையுமாறு, நெற்றி கண்ணால் சுட்டெரித்தவர் சிவபெருமான் . அத்தகையவரின் திருவுள்ளம் தன் வெற்றியாக மாற , அதனால் அன்றோ அம்மை ஆனவள் சிவனின் இடபாகம் பெற்றாள்.!
No comments:
Post a Comment