Wednesday 22 June 2011


கொடியே இளவஞ்சி கொம்பே எனக்கு வம்பேபழுத்த  !

படியே மறையின் பரிமளமே பனிமால் இமய !

பிடியே பிரமன் முதலாய தேவரைப்  பெற்ற அம்மே !

அடியேனி றந்து இங்கினிப் பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே!

<பொருள்>

பொன்கொடி போன்றவளே ! இளைய வஞ்சி கொம்பு போன்றவளே !
தகுதி இல்லாத எனக்கு தானே வந்து அருள் அளித்த கனியே !
வேதமான மலரில் பரவிய மணம் போல விளங்குபவளே !
பனியை உடைய பெரிய இமய மலையில் தோன்றிய பிடி போன்றவளே !
நான் முகன் முதலிய தேவரை பெற்றெடுத்த தாயே !அடியவன் இவ்வுலகத்தில் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே !

No comments:

Post a Comment