Thursday 14 July 2011

இருபத்தி எட்டாம் பாடல்~~~~~

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் !


புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர்த்தாள் !

அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியவரசும் !

செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே ! 
<பொருள் >

காவியத்திலும் கவிதையிலும் வரும்,, சொல்லும் அதன் பொருளும் போன்று 
என்றும் இணைபிரியாது ஆனந்த கூத்து இயற்றும் உன் துணைவனான சிவபெருமானுடன் ,
பொருந்தியுள்ள நறுமணம் உடைய பூங்கொடி போன்றவளே ,!  புதிய மலரை போன்று 
எபோதும் உள்ள உன் திருவடிகளை அல்லும் பகலும் தொழும் அடியவர்களுக்கு ,
பகைவர்களால் அழிவு வராத அரச செல்வமும் பயன் தரும் முறையில் செல்லும் 
தவ வாழ்வும் இறுதியில் சிவலோக பதவியும் கிடைக்க பெறும்!





No comments:

Post a Comment