Saturday 30 July 2011

பாடல் முப்பத்து மூன்று ~~~~~~

இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க !

அழைக்கும் பொழுது வந்து அஞ்சேல் என்பாய் அத்தர் சித்தமெல்லாம் !

குழைக்கும் களப குளிமுளையாமலை கோமளமே !

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே !

<பொருள்>
எம்பெருமானின் உள்ளமானதை உருக செய்யும் சந்தன கலவை பூச பெற்ற 
குவிந்த கொங்கைகளையுடைய யாமளை என்ற மென்மையானவளே !
விதித்த விதியின் படி கொள்ள வரும் எமன் எனை நடுங்க செய்து 
அழைக்கும் போது , நீ எழுந்தருளி , நீ அஞ்ச வேண்டா : என்று அருளுவாயாக ... நான் துன்பம் அடையும்போது வேறு எவரையும் நாடாமல் , தாயே ! என்று உன்னையே நாடி ஓடிவருகிறேன் !...



No comments:

Post a Comment