Saturday 30 July 2011

பாடல் முப்பத்து நான்கு ~~~~~~

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் !

தந்தே பரிவொடு தான்போ இருக்கும் சதுமுகமும் !

பைந்தேன் அலங்கல் பருமணி யாகமும் பாகமும்பொன் !

செந்தேன் மலரு மலர்கதிர் ஞ்சயிரும் திங்களுமே !

<பொருள்>
அபிராமி தன்னிடம் வந்து அடைக்கலம் அடையும் அடியவருக்கு 
பொன் உலகபதவியை அன்புடன் தருவாள் ,தந்து , தான் சென்று 
நான் முகனின் நான்கு முகங்களிலும் , மற்றும் பசிய தேன்சிந்தும் 
துளசிமாலை சூடிய கௌத்துவ மணி அணிந்த திருமாலின் மார்பிலும் 
சிவபெருமானின் இடபாகத்திலும் , செந்தேன் சிந்தும் தாமரை மலரிலும் 
பரந்த கதிரிகளையுடைய கதிரவனின் ஒலிகய்டையிலும் 
திங்களின் குளிர்ச்சியிலும் இருப்பாயாக ! 


No comments:

Post a Comment