வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் !
தந்தே பரிவொடு தான்போ இருக்கும் சதுமுகமும் !
பைந்தேன் அலங்கல் பருமணி யாகமும் பாகமும்பொன் !
செந்தேன் மலரு மலர்கதிர் ஞ்சயிரும் திங்களுமே !
<பொருள்>
அபிராமி தன்னிடம் வந்து அடைக்கலம் அடையும் அடியவருக்கு
பொன் உலகபதவியை அன்புடன் தருவாள் ,தந்து , தான் சென்று
நான் முகனின் நான்கு முகங்களிலும் , மற்றும் பசிய தேன்சிந்தும்
துளசிமாலை சூடிய கௌத்துவ மணி அணிந்த திருமாலின் மார்பிலும்
சிவபெருமானின் இடபாகத்திலும் , செந்தேன் சிந்தும் தாமரை மலரிலும்
பரந்த கதிரிகளையுடைய கதிரவனின் ஒலிகய்டையிலும்
திங்களின் குளிர்ச்சியிலும் இருப்பாயாக !
No comments:
Post a Comment