Wednesday 6 April 2011

காப்பு

தரமற் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை !
ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே உலேகேழும் பெற்ற !
சீர் அபிராமி அந்தாதி எபோதும் என் சிந்தையுள்ளே! 
காரமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே! 

<><>பொருள் <><>
மாலையாய் கட்ட பட்ட கொன்றையும் சண்பக மலர்மாலையும் 
அணிந்த தில்லையம்பதியில் உள்ள நடராசருக்கும் 
அவர் தம் இடப்பக்கத்தில் வீற்றிருக்கும் உமை அம்மையாருக்கும் 
தோன்றிய மைந்தனே !மேகம் போன்ற மேனியை உடைய 
கணபதியே ஏழ் உலகங்களையும் பெற்ற சிறந்த அபிராமி அம்மையாருக்கு 
அணியும் அந்தாதி எபோதும் என் மனதுள் பொருந்தி நிற்குமாறு அருளுவாயாக !!!!