உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம் உணர்வுடையோர்!
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை!
துதிக்கின்ற மின்கொடி மென்கடி குங்கும தோயம் என்ன !
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே !
தோன்றுகின்ற உதய சூரியன் .தலையின் உச்சியில் மங்கையர் வைத்து கொள்ளும்
குங்கும திலகம் மனிதர்கள் மதித்து கொண்டாடும் மாணிக்கம் , மாதுளம் மலர் , தாமரை மலரில் வீற்றுருகின்ற திருமகள் துதிக்கும் மின்னல் கோடி
மென்மையான மனதை உடைய குங்கும கலவை நீர் என்று அடியார்கள் உவமையாக எடுத்து கூறும்
திருமேனி உடைய அபிராமி அம்மை எனக்கு துணையாக இருப்பார் என்பது திண்ணம் .......
..