Tuesday 12 April 2011

முதல் பாடல் ... செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இதை தினமும் சொல்ல நல்ல பலனாம் ........

உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம் உணர்வுடையோர்!
 மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை!
துதிக்கின்ற மின்கொடி மென்கடி குங்கும தோயம் என்ன !
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே !


தோன்றுகின்ற உதய சூரியன் .தலையின் உச்சியில் மங்கையர் வைத்து கொள்ளும் 
குங்கும திலகம் மனிதர்கள் மதித்து கொண்டாடும் மாணிக்கம் , மாதுளம் மலர் , தாமரை மலரில் வீற்றுருகின்ற திருமகள்  துதிக்கும் மின்னல் கோடி 
மென்மையான மனதை உடைய குங்கும கலவை நீர் என்று அடியார்கள் உவமையாக எடுத்து கூறும் 
திருமேனி உடைய அபிராமி அம்மை எனக்கு துணையாக இருப்பார் என்பது திண்ணம் ....... 
..