பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்!
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்!
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்!
திருந்திய சுந்தரி யந்தரி பாதமென் சென்னியதே !
<பொருள் >
பொருந்திய திருபுறங்களின் தலைவி . செப்பாய் உவமையாக கூறும்
இரு கொங்கைகளின் சுமையினாலே வருந்திய வஞ்சி கொடி போன்ற
இடையை உடைய மனோன்மணி . நீண்ட சடையை உடைய
சிவபெருமான் முன்காலத்தே அருந்திய நஞ்சினை கழுத்தில்
நிறுத்தி அமுதம் ஆக்கிய அன்னை . தாமரை மலர் மீது
வீற்று இருக்கின்ற பேரழகி , பிரகாச வடிவுடையாள்
ஆன அபிராமி அம்மையின் திருவடிகள் என் மீது உள்ளனவாகும் !
ஆன அபிராமி அம்மையின் திருவடிகள் என் மீது உள்ளனவாகும் !