Saturday 30 April 2011

ஆறாம் பாடல்

சென்னியது உன்பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே !

மன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே!

முன்னிய நின்னடி யாருடன் கூடி முறைமுறையே !

பன்னிய தென்று முன் தன்பரமாகம பத்ததியே !

பொருள் 

செந்நிறமான திருமேனி உடைய பெருமாட்டியே ! அடியேனின் தலை மீது  பொருந்தி இருப்பது நின் அழகிய திருவடி தாமரை மலர் !
என மனதுள் பொருந்தி இருப்பது உன் தெய்வ தன்மை பொருந்திய மந்திரம் 
உன்னையே தியானம் செய்து வாழும் அடியாருடன் !
ஒன்று கூடி முறை முறையாக பாராயணம் செய்பவை நின் மேலான 
ஆகம நெறிகளாகும்!....