Tuesday 10 May 2011

பதினோராம் பாடல்

ஆனந்த மாயின் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் !

வானந்த மான வடிவுடையான் மறை நான் கினுக்கும் !

தானந்த மான சரணார விந்தம் தவளநிறக் !

கானந்த ஆடரங்கா எம்பிரான் முடி கண்ணியதே !

<பொருள் >

ஆனந்த வடிவம் ஆகி , என் அறிவாகி , நிறைந்த அமுதம் போன்றவழகி .
வான் ,பூமி, போன்ற ஐயும் பூதங்களுக்கும் தன் வடிவாக கொண்டவள் அபிராமி , அந்த அற்புத அன்னை நான்கு மறைகளுக்கும் , முடிவாக நிற்கும் 
திருவடிகள் , வெண்மையான நிறம் கொண்ட தன் ஆடும் இடமாய் கொண்ட 
என் சிவபெருமானின் முடிக்கு மாலையாய் விளங்குகின்றன ! 

பத்தாம் பாடல்


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைபதுன்னை !

என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் ஏழு தாமரையின் !

ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து !

அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே !

<பொருள் >

எழுத படாத வேதத்தில் பொருந்திய அறிய பொருளே !
அருள் வடிவாக விளங்குபவளே ! உமையே ! முன்காலத்தில் இமய
 மலையில் பிறந்தருளிய பார்வதியே ! அழியாத முக்தி இன்பமே !நான் 
, நின்றவாறும் , நடந்தவாறும் படுத்தவாரும் துதிப்பது நின்னையே !