Saturday 28 May 2011

பதினான்காம் பாடல்

வந்திப்பவர் உன்னை வானவர் தானவரானவர்கள் !

சிந்திப் பவர்னல் திசை முகர் நாரணர் சிந்தையுள்ளே !

பந்திப் பவரழி யாபரமானந்தர் பாரில் உன்னைச் !

சந்திப்பவர் கெலிதா மெம்பிரா ட்டினின் தண்ணளியே !

<பொருள் >

எம் தாயே ! நின்னை வணங்குபவர்கள் வானவரும் அசுரர்களும் ஆவார்கள் .
உன்னை மனதுள் தியானிப்பவர்கள் நல்லவரான நான் முகனும் 
நாராயணரும் ஆவர்கள் . தம் மனதுள் அன்பினால் பிணித்து இன்பம் 
அடைபவர் அழியாத பரமானந்தா  வடிவுடையா  சிவ பெருமான் 
ஆவார் . இத்துணை சிறப்பும் கொண்ட நின் திருவருள் . உலகத்தில் 
நின்னை  தரிசிப்பவர்க்கு எளிதாகின்றது !
இது என்ன வியப்பு !