Friday 3 June 2011

பதினைந்தாம் பாடல் ~~~~~

தண்ணளி கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வர்! 

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்மதி வானவர் தம் !

வின்னெளிக் செல்வமும் அழியாமுத்தி வீடும் அன்றோ !


பண்ணளிக்கும் சொற்பரிமல யாமளைப் பைங்கிளியே !

<பொருள்>
பண் போல பேசும் இனிய சொற்களும் சிறந்த நறுமணமும் உடைய 
ஷ்யாமளா தேவியான பசுங்கிளி போன்ற அன்னையே ! உன் குளிர்ந்த 
அருளை பெறுதற்காக முன் பிறவியில் பலகோடி தவங்களை செய்தவர்கள் 
இந்த உலகத்தை ஆள்கின்ற அரசுரிமை செல்வத்தை மட்டுமா பெறுவார்கள்?
அறிவை உடைய தேவர்களுக்குரிய இந்த்ர பதவியான செல்வத்தை 
பின் எக்காலத்தும் அழியாத முக்தியான வீட்டுல வாழ்கையும் பெறுவார்கள்