வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்து இருக்கும் !
செவியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே !
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதம் ஆகிவந்து !
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே !
<பொருள்>
அன்னையே !நீ கவர்ந்து கொண்ட இடபாகத்தை உடைய சிவபெருமானும் நீயும் கூடி மகிழ்து இருக்கும் நிலையில் உள்ள கோலமும் , உங்கள் திருமண கோலமும் , என் உள்ளத்தில் இருந்த அகந்தையை போக்கி என்ன உள்ளதை ஆண்ட உன் பொலிவுடைய பொற்பாதம் எழுந்து வந்து
கூற்றுவன் என்னை கவர வரும்போது அவன் காண வெளிவந்து நின்று ,
அவனால் வரும் துன்பத்தை போக்கி அருள வேண்டும் !