Sunday 19 June 2011

இருபதாம் பாடல்~~~~~

உறைகின்ற நின்திரு கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ !

அறைகின்ற நான் மறையின் அடியோ ! முடியோ ! அமுதம் !

நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ ! என்றன் நெஞ்சகமோ !

மறைகின்ற வாரிதியோ ! பூரணாசல மங்கலையே ! 

<பொருள்>

எங்கும் நிறைந்தவளையும் தளர்ச்சி அற்றவளாயும்  உள்ள மங்கலமான அபிராமியே ! நீ விற்று இருக்கின்ற நின் திருகோவிலில் நின் கணவர் 
சிவபெருமானின் இடபாகமோ ? உன்னை துதிக்கின்ற வேதங்களின் மூலமான பிரணவமோ ? அந்த வேதங்களின் உச்சியான 
உபநிடந்தன்களோ ? அமுதம் நிறைந்துள்ள வெண்மையான சந்திரனோ ?
தாமரை மலரோ ? என் உள்ளமோ ?அனைத்தும் மறைவதற்கான கடலோ ?
 பூரணம் நிறைந்த என் மங்கலையே .. உன்னை வணங்குகிறேன் !!!!


பத்தொன்பதா ம் பாடல்~~~~~

வெளிநின்ற நினதரு மேனியை பார்த்து என் விழியுநெஞ்சும் !

களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே !

தெளிநின்ற ந்ஜனம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ !

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பது மேனி உறைபவளே !

<பொருள்>
ஒளியுடைய ஒன்பது கோணங்களில் விற்று இருக்கின்ற  தாயே !
புறத்தில் யாவரும் எழுந்தருளிய நின் அழகிய கோலத்தை தரிசித்து 
என் கண்களும் மனமும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு கரைகாண முடியாது . ஆயினும் என் உள்ளத்தில் தெளிந்த ந்ஜனம் உள்ளது .
இன்னும் என்ன என்ன அனுபவத்தை வழங்கவேண்டும் 
என்பது நின் திருவுள்ளமோ ?