உறைகின்ற நின்திரு கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ !
அறைகின்ற நான் மறையின் அடியோ ! முடியோ ! அமுதம் !
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ ! என்றன் நெஞ்சகமோ !
மறைகின்ற வாரிதியோ ! பூரணாசல மங்கலையே !
<பொருள்>
எங்கும் நிறைந்தவளையும் தளர்ச்சி அற்றவளாயும் உள்ள மங்கலமான அபிராமியே ! நீ விற்று இருக்கின்ற நின் திருகோவிலில் நின் கணவர்
சிவபெருமானின் இடபாகமோ ? உன்னை துதிக்கின்ற வேதங்களின் மூலமான பிரணவமோ ? அந்த வேதங்களின் உச்சியான
உபநிடந்தன்களோ ? அமுதம் நிறைந்துள்ள வெண்மையான சந்திரனோ ?
தாமரை மலரோ ? என் உள்ளமோ ?அனைத்தும் மறைவதற்கான கடலோ ?
பூரணம் நிறைந்த என் மங்கலையே .. உன்னை வணங்குகிறேன் !!!!