உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகுமன்பு!
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணிஎனக்கே !
அடைத்தனை நெஞ்சதழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்!
துடைத்தனை சுந்தரி நின்னருளேது என்று சொல்லுவதே !
<பொருள்>
பேரழகு உடையவளே ! வஞ்சகமாக யான் அறியாமல் என்னை துன்புறுத்தும்
பிறவி குவியலை அழித்தாய் . அதற்ககு முன் உள்ளம் உருகும் அன்பை அடியேன் பெறும்படி செய்தாய் ! நின் தாமரை மலர் போன்ற திருவடிகளை
எளியேன் சூடி கொள்ளும் படியான பணியை எனக்கு அருளினாய்
என் மனதில் உள்ள அழுக்கை எல்லாம் நின் அருள் என்ற தூய்மையான
நீரால் கழுவினாய் தூய்மை செய்தாய் ! இவளவுக்கும் காரணமான உனதருளை என்னவென்று கூறுவது!.................
நீரால் கழுவினாய் தூய்மை செய்தாய் ! இவளவுக்கும் காரணமான உனதருளை என்னவென்று கூறுவது!.................