சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் !
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர்த்தாள் !
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியவரசும் !
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே !
<பொருள் >
காவியத்திலும் கவிதையிலும் வரும்,, சொல்லும் அதன் பொருளும் போன்று
என்றும் இணைபிரியாது ஆனந்த கூத்து இயற்றும் உன் துணைவனான சிவபெருமானுடன் ,
பொருந்தியுள்ள நறுமணம் உடைய பூங்கொடி போன்றவளே ,! புதிய மலரை போன்று
எபோதும் உள்ள உன் திருவடிகளை அல்லும் பகலும் தொழும் அடியவர்களுக்கு ,
பகைவர்களால் அழிவு வராத அரச செல்வமும் பயன் தரும் முறையில் செல்லும்
தவ வாழ்வும் இறுதியில் சிவலோக பதவியும் கிடைக்க பெறும்!