Sunday 17 July 2011

இருபத்தி ஒன்பதாம் பாடல் ~~~~

சித்தியும் சித்தி தரும் தெய்வமாகி திகழும் பரா !


சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவமுயல்வார் !

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைதெழுந்த!

புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே ! 

.                                                                         <பொருள் >


எட்டு வகை பட்ட சித்தியும் அவற்றினை அளிக்கும் தெய்வமாகி நிற்கும் 
பராசக்தியும் . ஆகி ..அந்த பராசக்தி தன்னிடம் பொருந்த செய்துள்ள சிவமும் 
தவத்தை இயற்றுபவர் அடையும் முக்தி இன்பமும் , முக்தியை பெறுவதற்கு 
மூலமும் , அந்த முலத்தை அறியும் அறிவும் . இவை எல்லாமுமாக இருப்பவள் 
அறிவில் நின்று பாதுகாக்கும் திருப்புற சுந்தரி நாம் எல்லோரையும் காக்கட்டும் ..