சித்தியும் சித்தி தரும் தெய்வமாகி திகழும் பரா !
சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவமுயல்வார் !
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைதெழுந்த!
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே !
. <பொருள் >
எட்டு வகை பட்ட சித்தியும் அவற்றினை அளிக்கும் தெய்வமாகி நிற்கும்
பராசக்தியும் . ஆகி ..அந்த பராசக்தி தன்னிடம் பொருந்த செய்துள்ள சிவமும்
தவத்தை இயற்றுபவர் அடையும் முக்தி இன்பமும் , முக்தியை பெறுவதற்கு
மூலமும் , அந்த முலத்தை அறியும் அறிவும் . இவை எல்லாமுமாக இருப்பவள்
அறிவில் நின்று பாதுகாக்கும் திருப்புற சுந்தரி நாம் எல்லோரையும் காக்கட்டும் ..