அன்றே தடுத்தென்னை ஆண்டு கொண்டாய் கொண்ட
வென்கை !
நன்றே உனக்கினி நானென் செயினும் நடுகடனுள் !
சென்றே விழினும் கரையேற்று கை நின் திருவுளமே !
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே !
<பொருள் >
ஒருவடிவாய் விளங்குபவளே !பல வடிவங்களையும் விளங்குபவளே !
வடிவம் இல்லாத அருவமாய் விளங்குபவளே !என் அன்னையான உமையவளே !
முன்னர் ஒருநாள் எனை தடுதாட்கொண்டாய் ,அவ்வாறு தடுதட்கொண்டதை இல்லை என
கூறுதல் நியாயமா உனக்கு ?இனி நான் என்ன செய்தாலும் , கடலின் நடுவில் போய் விழுந்தாலும் !
என் குற்றத்தை மறந்து என்னை கரை ஏற்றுதல் உன் திருவுள பாங்கை பொருத்ததாகும் !.....