புண்ணியம் செய்தனமே மனமே புது பூங்குவளை!
கண்ணியுன்செய கணவரும் கூடி நங் காரணத்தால்!
நண்ணி இங்கே வந்து தம்மடியார்கள் நடுவிருக்க!
பண்ணி நன்சென்னியின் மேற் பத்மபாதம் பதித்திடவே !!
என் உள்ளமே ! புதியதாய் மலர்ந்த பூகுவளை போன்ற கண்களை
உடைய அபிராமி அன்னையும் அபெருமாட்டியின் சிவந்த நிறம்
கொண்ட கணவரும் கூடி நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் ,நாம் இருக்கும் இடத்தை அடைந்து , நம்மை தம் அடியார்கள் இருக்கும் இடத்தில் இருக்குமாறு செய்து ,நம் தலைமீது
தம் திருவடியை பதிப்பதற்கு தக்கவாறு நல்ல புண்ணியங்களை நாம்
முன்பு செய்துள்ளோம் ~~~