Wednesday 8 February 2012


பாடல் முப்பத்தைந்து ~~~~~


திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க !
எங்கட் கொரு தவம் எய்தியவா வெண்ணிறேந்தவிண்ணோர் !
தங்கட்கும் ஒரு தவம் எய்துமோ தர்ணகட் கடனுள் !
வெங்கட் பணியணை மேல் துயில் கூறும் விழுபொருளே !

                                                              <பொருள் >

  மிகுந்த அலைகளை உடைய பாற்கடலில் கொடிய கண்ணை உடைய 
ஆதி சேடன் பாம்பை பஞ்சணையாக கொண்டு அறிதுயில் கொள்ளும் பரம்பொருளே ! சிவபெருமானின் திருமுடியில் உள்ள பிறை சந்திரனின் 
அணிந்தவரின் மணம் கமழும் நின் சிறிய அடிகளை அடியவரான எம் 
தலையில் வைத்து அருள்வாய் ! இங்ஙனம் வைத்து நீ எந்கலூகு அருள 
யாம் செய்த ஒப்பற்ற தவம் தான் என்ன ? எண்ணிலா தேவர்களுக்கு கூட
இத்தவம் கிடைக்குமா என்பது ஐயமே !!!





No comments:

Post a Comment