பாடல் முப்பது ஏழு ...
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலமன்ன!
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விடவரவின்!
பைக்கே அணிவது பன்மணி கோவையும் பட்டுமெட்டு!
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே ..!
<பொருள் >
எட்டு திசையையுமே தன ஆடையாய் அணிந்து கொண்ட இறைவனின் இடபாகத்தை சேர்ந்து எழுந்தருளியுள்ள தாய் அபிராமி .
தன் கையில் அணிந்து இருப்பவை கரும்பும் மலர்களும் ஆகும் . தாமரை மலர்போன்ற உடலில் அணிவது தூய வெண்மையான
முத்து மாலை . நஞ்சை உடைய பாம்பின் படத்தை போன்று இடையில் அணிந்து இருப்பது பல மணிகள் பதித்த கோவையும்
பட்டும் ஆகும் ~~~~
nizzzz...........
ReplyDelete