Sunday 26 February 2012

பாடல் முப்பது ஏழு ...



கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலமன்ன!
 
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விடவரவின்!
 
பைக்கே அணிவது பன்மணி கோவையும் பட்டுமெட்டு!

திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே ..!

<பொருள் >

எட்டு திசையையுமே தன ஆடையாய் அணிந்து கொண்ட இறைவனின் இடபாகத்தை சேர்ந்து எழுந்தருளியுள்ள தாய் அபிராமி .
தன் கையில் அணிந்து இருப்பவை கரும்பும் மலர்களும் ஆகும் . தாமரை மலர்போன்ற உடலில் அணிவது தூய வெண்மையான 
முத்து மாலை . நஞ்சை உடைய பாம்பின் படத்தை போன்று இடையில் அணிந்து இருப்பது பல மணிகள் பதித்த கோவையும் 
பட்டும் ஆகும் ~~~~


1 comment: