Sunday 26 February 2012

முப்பத்து எட்டாம் பாடல் ~~~~~





பவள கோடியில் பழுத்த செவ்வாயும்  பனிமுறுவல் !

தவளத் திருநகையும் துணையாய் எங்கள் சங்கரனை !
துவள பொருதுதுடி இடை சாய்க்கும் துணை முலையாள்!
அவளை பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே!


<பொருள்>



எல்லா போகங்களிலும் சிறந்த இந்திரா போகங்களை அடைந்து வானவர்க்கு அரசனாய் அமராவதியை 
ஆளும் பொருட்டு . பவளம் போன்ற கனிந்த செவ்வாயும் குளுமையான முறுவலும் வெண்மையான பற்களும் , இறைவரான சிவபெருமானை 
நெகிழுமாறு மோதி 
உடுக்கை போன்ற இடையை தளர செய்யும் இரண்டு கொங்கைகளை உடைய அபிராமி அன்னையை வணங்குவீராக ..


No comments:

Post a Comment