Monday 16 April 2012

முப்பத்து ஒன்பதாம் பாடல் ..

ஆளுகைக்கு உந்தன் அடிதாமரைகளுண்டு அந்தகன்பால் !!

மீளுகைக்கு உன்றன் விழியன் கடையுண்டு மேலிவன்னின்!!

மூளுகைக் கேன்குறை நின்குறையே அன்று முப்புரங்கள் !!

மாளுகைக் கம்பு தொடுத்தனில் லான்பங்கில் வாணுதலே !!

<பொருள்>

மூன்று புறங்களும்அழிவதற்கு திருமாலான அம்பை தொடுத்த 
மேரு மலையான வில்லை உடைய சிவபெருமானின் இடபாகத்தில் 
விற்று இருக்கின்ற ஒளி உடைய நெற்றி உடயவளே !
என்னை ஆள்வதற்கு உன் திருவடி தாமரைகள் உண்டு !
எமனிடம் செல்லாமல் மீண்டும் உய்வதர்க்கு நின்னுடைய 
கடைக்கண் பார்வை உள்ளது இவற்றுடன் தொடர்பு 
கொள்ளாதது என் குறையே !உன்னருள் குறையன்று !!