Monday 24 December 2012

நாற்பதாம் பாடல்~~~

வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சி பேணுதர்க்கெண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியன் அல்லாத கன்னியை காணும் அன்பு பூணுதர்க்கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே!!!!!




ஒளியுடைய நெற்றி பொருந்திய கண்ணை உடையவளை தேவர்கள் யாவரும் வந்து வணங்கி விரும்பி வழிபடுவதற்கு நினைத்த எம்பெருமாட்டியை ,அறியாமை உடைய உள்ளத்தில் காண்பதற்கு நெருங்கியவள் அல்லாத கன்னியை, தரிசித்து அன்பு கொள்வதற்கு உண்டான எண்ணம்,முன்பிறவியில் நான் செய்த புண்ணியம் அன்றோ ~~~~~~

No comments:

Post a Comment