முப்பத்து ஒன்பதாம் பாடல் ..
ஆளுகைக்கு உந்தன் அடிதாமரைகளுண்டு அந்தகன்பால் !!
மீளுகைக்கு உன்றன் விழியன் கடையுண்டு மேலிவன்னின்!!
மூளுகைக் கேன்குறை நின்குறையே அன்று முப்புரங்கள் !!
மாளுகைக் கம்பு தொடுத்தனில் லான்பங்கில் வாணுதலே !!
<பொருள்>
மூன்று புறங்களும்அழிவதற்கு திருமாலான அம்பை தொடுத்த
மேரு மலையான வில்லை உடைய சிவபெருமானின் இடபாகத்தில்
விற்று இருக்கின்ற ஒளி உடைய நெற்றி உடயவளே !
என்னை ஆள்வதற்கு உன் திருவடி தாமரைகள் உண்டு !
எமனிடம் செல்லாமல் மீண்டும் உய்வதர்க்கு நின்னுடைய
கடைக்கண் பார்வை உள்ளது இவற்றுடன் தொடர்பு
கொள்ளாதது என் குறையே !உன்னருள் குறையன்று !!