Tuesday, 25 December 2012

நாற்பத்து ஒன்றாம் பாடல் ~~~


புண்ணியம் செய்தனமே மனமே புது பூங்குவளை!

கண்ணியுன்செய கணவரும் கூடி நங் காரணத்தால்!

நண்ணி இங்கே வந்து தம்மடியார்கள் நடுவிருக்க!

பண்ணி நன்சென்னியின் மேற் பத்மபாதம் பதித்திடவே !!







                  ~~~~~~~~~~~~~~~~~~பொருள்~~~~~~~~~~~~~~~~~~ 

என் உள்ளமே ! புதியதாய் மலர்ந்த பூகுவளை போன்ற கண்களை 
உடைய அபிராமி அன்னையும் அபெருமாட்டியின் சிவந்த நிறம் 
கொண்ட கணவரும் கூடி நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் ,நாம் இருக்கும் இடத்தை அடைந்து , நம்மை தம் அடியார்கள் இருக்கும் இடத்தில் இருக்குமாறு செய்து ,நம் தலைமீது 
தம் திருவடியை பதிப்பதற்கு தக்கவாறு நல்ல புண்ணியங்களை நாம் 
முன்பு செய்துள்ளோம் ~~~

Monday, 24 December 2012

நாற்பதாம் பாடல்~~~

வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சி பேணுதர்க்கெண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியன் அல்லாத கன்னியை காணும் அன்பு பூணுதர்க்கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே!!!!!




ஒளியுடைய நெற்றி பொருந்திய கண்ணை உடையவளை தேவர்கள் யாவரும் வந்து வணங்கி விரும்பி வழிபடுவதற்கு நினைத்த எம்பெருமாட்டியை ,அறியாமை உடைய உள்ளத்தில் காண்பதற்கு நெருங்கியவள் அல்லாத கன்னியை, தரிசித்து அன்பு கொள்வதற்கு உண்டான எண்ணம்,முன்பிறவியில் நான் செய்த புண்ணியம் அன்றோ ~~~~~~

Monday, 16 April 2012

முப்பத்து ஒன்பதாம் பாடல் ..

ஆளுகைக்கு உந்தன் அடிதாமரைகளுண்டு அந்தகன்பால் !!

மீளுகைக்கு உன்றன் விழியன் கடையுண்டு மேலிவன்னின்!!

மூளுகைக் கேன்குறை நின்குறையே அன்று முப்புரங்கள் !!

மாளுகைக் கம்பு தொடுத்தனில் லான்பங்கில் வாணுதலே !!

<பொருள்>

மூன்று புறங்களும்அழிவதற்கு திருமாலான அம்பை தொடுத்த 
மேரு மலையான வில்லை உடைய சிவபெருமானின் இடபாகத்தில் 
விற்று இருக்கின்ற ஒளி உடைய நெற்றி உடயவளே !
என்னை ஆள்வதற்கு உன் திருவடி தாமரைகள் உண்டு !
எமனிடம் செல்லாமல் மீண்டும் உய்வதர்க்கு நின்னுடைய 
கடைக்கண் பார்வை உள்ளது இவற்றுடன் தொடர்பு 
கொள்ளாதது என் குறையே !உன்னருள் குறையன்று !! 


Sunday, 26 February 2012

முப்பத்து எட்டாம் பாடல் ~~~~~





பவள கோடியில் பழுத்த செவ்வாயும்  பனிமுறுவல் !

தவளத் திருநகையும் துணையாய் எங்கள் சங்கரனை !
துவள பொருதுதுடி இடை சாய்க்கும் துணை முலையாள்!
அவளை பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே!


<பொருள்>



எல்லா போகங்களிலும் சிறந்த இந்திரா போகங்களை அடைந்து வானவர்க்கு அரசனாய் அமராவதியை 
ஆளும் பொருட்டு . பவளம் போன்ற கனிந்த செவ்வாயும் குளுமையான முறுவலும் வெண்மையான பற்களும் , இறைவரான சிவபெருமானை 
நெகிழுமாறு மோதி 
உடுக்கை போன்ற இடையை தளர செய்யும் இரண்டு கொங்கைகளை உடைய அபிராமி அன்னையை வணங்குவீராக ..


பாடல் முப்பது ஏழு ...



கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலமன்ன!
 
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விடவரவின்!
 
பைக்கே அணிவது பன்மணி கோவையும் பட்டுமெட்டு!

திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே ..!

<பொருள் >

எட்டு திசையையுமே தன ஆடையாய் அணிந்து கொண்ட இறைவனின் இடபாகத்தை சேர்ந்து எழுந்தருளியுள்ள தாய் அபிராமி .
தன் கையில் அணிந்து இருப்பவை கரும்பும் மலர்களும் ஆகும் . தாமரை மலர்போன்ற உடலில் அணிவது தூய வெண்மையான 
முத்து மாலை . நஞ்சை உடைய பாம்பின் படத்தை போன்று இடையில் அணிந்து இருப்பது பல மணிகள் பதித்த கோவையும் 
பட்டும் ஆகும் ~~~~


Saturday, 18 February 2012

பாடல் முப்பது ஆறு ~~~~~~~~~~


பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும் !

மருளே ,மருளில் வரும் தொருளே . என்மனத்து வஞ்சத்து இருளேதும் !

இன்றி ஒளிவெளி யாகி இருக்கும் முன் தன் அருளே தனிகின்றி லேனம்பு !

யாதனத்து அம்பிகையே !!!!!


                                                                       <பொருள்>


செல்வ பொருளே , அசெல்வதால் நிறைவேறும் இன்பமே ! அறிய இன்பங்களை 
துய்ப்பதால் !வரும் மயக்கமே மயக்கத்தின் முடிவில் உண்டாகும் தெளிந்த அறிவே . தாமரையான இருக்கையில் அமர்ந்தவளே , எளியேன் மனதில் 
மாயையின் .இருள் சிறிதும் இன்றி , நீங்கிட சுடர் வீசும் பெருவெளியாய் 
விளங்கும் நின் திருவருள் எத்தகையது என்று நான் அறியேன் !!! 

Wednesday, 8 February 2012


பாடல் முப்பத்தைந்து ~~~~~


திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க !
எங்கட் கொரு தவம் எய்தியவா வெண்ணிறேந்தவிண்ணோர் !
தங்கட்கும் ஒரு தவம் எய்துமோ தர்ணகட் கடனுள் !
வெங்கட் பணியணை மேல் துயில் கூறும் விழுபொருளே !

                                                              <பொருள் >

  மிகுந்த அலைகளை உடைய பாற்கடலில் கொடிய கண்ணை உடைய 
ஆதி சேடன் பாம்பை பஞ்சணையாக கொண்டு அறிதுயில் கொள்ளும் பரம்பொருளே ! சிவபெருமானின் திருமுடியில் உள்ள பிறை சந்திரனின் 
அணிந்தவரின் மணம் கமழும் நின் சிறிய அடிகளை அடியவரான எம் 
தலையில் வைத்து அருள்வாய் ! இங்ஙனம் வைத்து நீ எந்கலூகு அருள 
யாம் செய்த ஒப்பற்ற தவம் தான் என்ன ? எண்ணிலா தேவர்களுக்கு கூட
இத்தவம் கிடைக்குமா என்பது ஐயமே !!!





Saturday, 30 July 2011

பாடல் முப்பத்து நான்கு ~~~~~~

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் !

தந்தே பரிவொடு தான்போ இருக்கும் சதுமுகமும் !

பைந்தேன் அலங்கல் பருமணி யாகமும் பாகமும்பொன் !

செந்தேன் மலரு மலர்கதிர் ஞ்சயிரும் திங்களுமே !

<பொருள்>
அபிராமி தன்னிடம் வந்து அடைக்கலம் அடையும் அடியவருக்கு 
பொன் உலகபதவியை அன்புடன் தருவாள் ,தந்து , தான் சென்று 
நான் முகனின் நான்கு முகங்களிலும் , மற்றும் பசிய தேன்சிந்தும் 
துளசிமாலை சூடிய கௌத்துவ மணி அணிந்த திருமாலின் மார்பிலும் 
சிவபெருமானின் இடபாகத்திலும் , செந்தேன் சிந்தும் தாமரை மலரிலும் 
பரந்த கதிரிகளையுடைய கதிரவனின் ஒலிகய்டையிலும் 
திங்களின் குளிர்ச்சியிலும் இருப்பாயாக ! 


பாடல் முப்பத்து மூன்று ~~~~~~

இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க !

அழைக்கும் பொழுது வந்து அஞ்சேல் என்பாய் அத்தர் சித்தமெல்லாம் !

குழைக்கும் களப குளிமுளையாமலை கோமளமே !

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே !

<பொருள்>
எம்பெருமானின் உள்ளமானதை உருக செய்யும் சந்தன கலவை பூச பெற்ற 
குவிந்த கொங்கைகளையுடைய யாமளை என்ற மென்மையானவளே !
விதித்த விதியின் படி கொள்ள வரும் எமன் எனை நடுங்க செய்து 
அழைக்கும் போது , நீ எழுந்தருளி , நீ அஞ்ச வேண்டா : என்று அருளுவாயாக ... நான் துன்பம் அடையும்போது வேறு எவரையும் நாடாமல் , தாயே ! என்று உன்னையே நாடி ஓடிவருகிறேன் !...



Friday, 29 July 2011

பாடல் முப்பது இரண்டு ~~~~~~~~~~~~

ஆசை கடலில் அகப்பட்ட அருளற்ற அந்தகன் கை !

பாசத்தில் அல்லற்படவிருந்தேனை நின் பாதம் என்னும் !

வாச கமலம் தலைமேல் வலியா வைத்து ஆண்டு கொண்ட!

நேசத்தை என்சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே !

<பொருள்>
என் இறைவனான சிவபெருமானின் இடபாகத்தில் எழுந்தருளி இருக்கும் 
நல்ல அணிகளை அணிந்த தாயே ! ஆசை என்ற கரை இல்லாத கடலில் துரும்பு போல அகப்பட்டு . அதன் காரணமாக இறப்பு உண்டாகும் காலத்தில் , அருள் இல்லாத எமனின் கைபாகத்தில் அகப்பட்டு துன்ப பட 
இருந்தேன் . இத்தகைய என்னை நின் திருவடி என்ற நறுமணம் உடைய 
தாமரையை வலிய என் தலை மீது சூட்டி அருளி என்னை ஆட்கொண்ட பெருங்கருணையை என்னவென்று சொல்வேன் !!!!!!?


Sunday, 24 July 2011

பாடல் முப்பத்து ஒன்று~~~~~

உமையும் உமையொரு பாகனுமே குருவில் வந்திங்கு !

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத் தாரினி எண்ணுதற்கு !

சமயங்களுமில்லை ஈன்றுடுப்பார் ஒரு தாயுமில்லை !

அமையு மமையுறு தோனியர் மேல் வைத்த ஆசையுமே !

< பொருள்>

     உமையும் அந்த உமையை இடபாகத்தில் கொண்ட சிவபெருமானும் ஒரே வடிவில் வந்து ஒன்றுக்கும் பற்று இல்லாத என்னை தன்னிடம் பற்று கொள்ளும்படி செய்து தடுத்தாட் கொண்டனர் . இனி நாம் போய் 
நற்கதி அடைவதற்கு வழி எது என்று ஆராய்வதற்கு சமையங்களும் இல்லை . நான் வீடு பேற்றை அடைய போவது உறுதி .
இனி என்னை ஈன்றெடுக்கும் தாயானவள் இல்லை ஆதலால் .
மூங்கில் போன்ற தோளை உடைய பெண்டிர்மீது வைக்கும் ஆசை இனி போதும் !

Wednesday, 20 July 2011

பாடல் முப்பது ~~~~~

அன்றே தடுத்தென்னை ஆண்டு கொண்டாய் கொண்ட 
                                                                    வென்கை !

நன்றே உனக்கினி நானென் செயினும் நடுகடனுள் !

சென்றே விழினும் கரையேற்று கை நின் திருவுளமே !

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே !
<பொருள் >
ஒருவடிவாய் விளங்குபவளே !பல வடிவங்களையும் விளங்குபவளே !
வடிவம் இல்லாத அருவமாய் விளங்குபவளே !என் அன்னையான உமையவளே !
முன்னர் ஒருநாள் எனை தடுதாட்கொண்டாய் ,அவ்வாறு தடுதட்கொண்டதை இல்லை என 
கூறுதல் நியாயமா உனக்கு ?இனி நான் என்ன செய்தாலும் , கடலின் நடுவில் போய் விழுந்தாலும் !
என் குற்றத்தை மறந்து என்னை கரை ஏற்றுதல் உன் திருவுள பாங்கை பொருத்ததாகும் !..... 



 

Sunday, 17 July 2011

இருபத்தி ஒன்பதாம் பாடல் ~~~~

சித்தியும் சித்தி தரும் தெய்வமாகி திகழும் பரா !


சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவமுயல்வார் !

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைதெழுந்த!

புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே ! 

.                                                                         <பொருள் >


எட்டு வகை பட்ட சித்தியும் அவற்றினை அளிக்கும் தெய்வமாகி நிற்கும் 
பராசக்தியும் . ஆகி ..அந்த பராசக்தி தன்னிடம் பொருந்த செய்துள்ள சிவமும் 
தவத்தை இயற்றுபவர் அடையும் முக்தி இன்பமும் , முக்தியை பெறுவதற்கு 
மூலமும் , அந்த முலத்தை அறியும் அறிவும் . இவை எல்லாமுமாக இருப்பவள் 
அறிவில் நின்று பாதுகாக்கும் திருப்புற சுந்தரி நாம் எல்லோரையும் காக்கட்டும் ..




Thursday, 14 July 2011

இருபத்தி எட்டாம் பாடல்~~~~~

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் !


புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர்த்தாள் !

அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியவரசும் !

செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே ! 
<பொருள் >

காவியத்திலும் கவிதையிலும் வரும்,, சொல்லும் அதன் பொருளும் போன்று 
என்றும் இணைபிரியாது ஆனந்த கூத்து இயற்றும் உன் துணைவனான சிவபெருமானுடன் ,
பொருந்தியுள்ள நறுமணம் உடைய பூங்கொடி போன்றவளே ,!  புதிய மலரை போன்று 
எபோதும் உள்ள உன் திருவடிகளை அல்லும் பகலும் தொழும் அடியவர்களுக்கு ,
பகைவர்களால் அழிவு வராத அரச செல்வமும் பயன் தரும் முறையில் செல்லும் 
தவ வாழ்வும் இறுதியில் சிவலோக பதவியும் கிடைக்க பெறும்!





Saturday, 2 July 2011

இருபத்தி ஏழாம் பாடல் ~~~~~

உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகுமன்பு!

படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணிஎனக்கே !

அடைத்தனை நெஞ்சதழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்!

துடைத்தனை சுந்தரி நின்னருளேது என்று சொல்லுவதே !

<பொருள்>

பேரழகு உடையவளே ! வஞ்சகமாக யான் அறியாமல் என்னை துன்புறுத்தும் 
பிறவி குவியலை அழித்தாய் . அதற்ககு முன் உள்ளம் உருகும் அன்பை அடியேன் பெறும்படி செய்தாய் ! நின் தாமரை மலர் போன்ற திருவடிகளை 
எளியேன் சூடி கொள்ளும் படியான பணியை எனக்கு அருளினாய் 
என் மனதில் உள்ள அழுக்கை எல்லாம் நின் அருள் என்ற தூய்மையான
 நீரால் கழுவினாய் தூய்மை செய்தாய் ! இவளவுக்கும் காரணமான உனதருளை என்னவென்று கூறுவது!.................






Tuesday, 28 June 2011

இருபத்தி ஆறாம் பாடல் ~~~~~

ஏந்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் !

காத்தும்! அழித்தும் , திரிபவராம் கமழ் பூங்கடம்பு !

சாத்தும் குழலனங்கே மணநாறு நின்தாளிணைக்கே என் !

நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே !

<பொருள்>

நறுமணம் கமழும் கடம்ப நறுமண மலர்களை அணியும் கூந்தலையுடைய 
தெய்வ பெண்ணே ! நின்னை துதிக்கும் அடியவர் பதினான்கு படைத்தும்
காத்தும் அழித்தும் விளங்கும் மும்மூர்த்திகலாவர் . அங்ஙனமாக மணம்
வீசும் நின் இரண்டு திருவடிகளுக்கு எளியவனான என் நாவில் தங்கிய 
பொலிவற்ற சொற்கள் ஏற்படுயதாக செயல் சிரித்தற்கு இடமாய் உள்ளது !

Thursday, 23 June 2011

இருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~

பின்னே திரிந்துன் அடியாரை பேணி பிறப்பறுக்க !

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதன் மூவருக்கும் !

அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே !

என்னே இனியுன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே !

<பொருள்>

முதற்கடவுளான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே !உலகத்து உயிர்களின் 
நன்மையின் பொருட்டு அபிராமி எனப் போற்ற பெறுகின்ற அருமருந்தாய் 
விளங்குபவளே !உன்னை நான் மறவாமல் என்றும் துதிப்பேன் !
இனிமேல் எனக்கு என்ன கவலை ? இத்தகைய பேரு எனக்கு வாய்த்ததிற்கான காரணம் யாது ? நின்னடியாரின் பின்னால் திரிந்து 
அவர்களை போற்றி பிறப்பை அறுப்பதற்கு தக்கபடி முன் பிறவியில் 
தவத்தை ஆற்றி உள்ளேன்!......



இருபத்தி நான்காம் பாடல் ~~~~~~

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த !
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதாவர்க்கு !

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே !

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே !

<பொருள்>

மாணிக்கம் போன்றவளே ! மணியில் பொருந்திய ஒளி போன்றவளே !
விளங்கும் உயர்ந்த மணிகளால் இயற்ற பெற்ற அணி போன்றவளே !
அணிந்து கொள்ளும் அணிகளுக்கு அழகாக விளங்குபவளே !
நின்னை அணுகாதர்வற்கு நோய் போன்றவளே !பிறவி என்ற நோய்க்கு மருந்தாக விளங்குபவளே !தேவர்க்கு பெருவிருந்தாக விளங்குபவளே !
நின் தாமரை பாதங்களை வணங்கிய பின் வேறு ஒருவரையும் வணங்க மாட்டேன் !


Wednesday, 22 June 2011

இருபத்தி மூன்றாம் பாடல் ~~~~~

கொள்ளேன் மனதினில் கோலம் அல்லது என்பர் கூட்டந்தன்னை !

விள்ளேன் பராமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு !

குள்ளே அனைதினிர்க்கும் புறம்பே உள்ளதே விளைந்த!

கள்ளே களிக்கும் கலியே அளியே என் கண்மணியே !

<பொருள்> 

பரந்த மூவுலகங்களுக்கு உள்ளும் அந்தர்யாமியாய் உள்ள அன்னையே !
எல்லா உலகங்கங்களுக்கும் அப்பாற்பட்டு விளங்குபவளே !
உள்ளத்தில் இன்பத்தை விளைவிக்கும் கள்போன்றவளே !
அக்கள்ளால் களிக்கும் களிப்பை விளங்குபவளே !எளியவனான என் கண்ணில் உள்ள மணி போன்றவளே ! யான் நின்னையே அல்லாமல் 
வேறு உருவத்தை தியான பொருளாக மனதில் கொள்ள மாட்டேன் !உன் 
அன்பர்கள் கூட்டத்தை என்றும் பிரிந்து நில்லேன் .... பிற சமயங்களை விரும்ப மாட்டேன் !

கொடியே இளவஞ்சி கொம்பே எனக்கு வம்பேபழுத்த  !

படியே மறையின் பரிமளமே பனிமால் இமய !

பிடியே பிரமன் முதலாய தேவரைப்  பெற்ற அம்மே !

அடியேனி றந்து இங்கினிப் பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே!

<பொருள்>

பொன்கொடி போன்றவளே ! இளைய வஞ்சி கொம்பு போன்றவளே !
தகுதி இல்லாத எனக்கு தானே வந்து அருள் அளித்த கனியே !
வேதமான மலரில் பரவிய மணம் போல விளங்குபவளே !
பனியை உடைய பெரிய இமய மலையில் தோன்றிய பிடி போன்றவளே !
நான் முகன் முதலிய தேவரை பெற்றெடுத்த தாயே !அடியவன் இவ்வுலகத்தில் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே !