Sunday, 19 June 2011

இருபதாம் பாடல்~~~~~

உறைகின்ற நின்திரு கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ !

அறைகின்ற நான் மறையின் அடியோ ! முடியோ ! அமுதம் !

நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ ! என்றன் நெஞ்சகமோ !

மறைகின்ற வாரிதியோ ! பூரணாசல மங்கலையே ! 

<பொருள்>

எங்கும் நிறைந்தவளையும் தளர்ச்சி அற்றவளாயும்  உள்ள மங்கலமான அபிராமியே ! நீ விற்று இருக்கின்ற நின் திருகோவிலில் நின் கணவர் 
சிவபெருமானின் இடபாகமோ ? உன்னை துதிக்கின்ற வேதங்களின் மூலமான பிரணவமோ ? அந்த வேதங்களின் உச்சியான 
உபநிடந்தன்களோ ? அமுதம் நிறைந்துள்ள வெண்மையான சந்திரனோ ?
தாமரை மலரோ ? என் உள்ளமோ ?அனைத்தும் மறைவதற்கான கடலோ ?
 பூரணம் நிறைந்த என் மங்கலையே .. உன்னை வணங்குகிறேன் !!!!


பத்தொன்பதா ம் பாடல்~~~~~

வெளிநின்ற நினதரு மேனியை பார்த்து என் விழியுநெஞ்சும் !

களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே !

தெளிநின்ற ந்ஜனம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ !

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பது மேனி உறைபவளே !

<பொருள்>
ஒளியுடைய ஒன்பது கோணங்களில் விற்று இருக்கின்ற  தாயே !
புறத்தில் யாவரும் எழுந்தருளிய நின் அழகிய கோலத்தை தரிசித்து 
என் கண்களும் மனமும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு கரைகாண முடியாது . ஆயினும் என் உள்ளத்தில் தெளிந்த ந்ஜனம் உள்ளது .
இன்னும் என்ன என்ன அனுபவத்தை வழங்கவேண்டும் 
என்பது நின் திருவுள்ளமோ ?


Friday, 17 June 2011

பதினெட்டாம் பாடல் ~~~~~

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்து இருக்கும் !

செவியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே !

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதம் ஆகிவந்து !

வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே !


<பொருள்>
அன்னையே !நீ கவர்ந்து கொண்ட இடபாகத்தை உடைய சிவபெருமானும் நீயும் கூடி மகிழ்து இருக்கும் நிலையில் உள்ள கோலமும் , உங்கள் திருமண கோலமும் , என் உள்ளத்தில் இருந்த அகந்தையை போக்கி என்ன உள்ளதை ஆண்ட உன் பொலிவுடைய  பொற்பாதம் எழுந்து வந்து 
கூற்றுவன் என்னை கவர வரும்போது அவன் காண வெளிவந்து நின்று ,
அவனால் வரும் துன்பத்தை போக்கி அருள வேண்டும் ! 

பதினேழாம் பாடல் ~~~~

அதிசய மான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் !

துதிசய வானன சுந்தர வள்ளி துணை இறுதி !

பதி சயமானது அபசய மாகமுன் பார்த்தவர்தம் !

மதிசய மாகவன்றோ வாம பாகத்தை வவ்வியதே !

<பொருள்>
அதிசயமான வடிவுடைய அபிராமி அம்மை , தாமரை மலர்கள் எல்லாம் துதிக்கும் , வெற்றி திருமுகமுடைய அழகு கொடியாவாள்,இரதியின் கணவனான காமன் பெற்ற வெற்றி தோல்வி அடையுமாறு, நெற்றி கண்ணால் சுட்டெரித்தவர் சிவபெருமான் . அத்தகையவரின் திருவுள்ளம் தன் வெற்றியாக மாற , அதனால் அன்றோ அம்மை ஆனவள் சிவனின் இடபாகம் பெற்றாள்.!

Tuesday, 7 June 2011

பதினாறாம் பாடல் ~~~~~

கிளியே கிளைஜர் மனத்தே கிடந்து கிளர்தொளிரும் !

ஒளியே ஒளிகிட மெண்ணில் ஒன்றுமில்லா! 

வெளியே வெளிமுதர் பூதங்களாகி விரிந்த அம்மே!

அளியேன் அறிவள விற்கு அளவானது அதிசயமே !

<பொருள்> 
கிளி போன்ற தாயே ! அடியவரின் மனதில் நிலை பெற்று விளங்கும் ஒளியே !உலகத்தில் விளங்கும் ஒலிகளுக்கெல்லாம் எல்லாம் ஆதாரமான பொருளே ! நினைத்து பார்க்கும் போது எந்த தத்துவமும் ஆகாமல் யாவற்றையும் கடந்து நின்ற பரவெளியே ! வான் முதலிய ஐம்பெரும் பூதங்களாய் விரிந்துள்ள தாயே !இத்துணை பெரியவளான நீ 
இந்த எளியேனின் சிற்றறிவின் அடங்கியது வியப்பே ஆகும் ! 



Friday, 3 June 2011

பதினைந்தாம் பாடல் ~~~~~

தண்ணளி கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வர்! 

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்மதி வானவர் தம் !

வின்னெளிக் செல்வமும் அழியாமுத்தி வீடும் அன்றோ !


பண்ணளிக்கும் சொற்பரிமல யாமளைப் பைங்கிளியே !

<பொருள்>
பண் போல பேசும் இனிய சொற்களும் சிறந்த நறுமணமும் உடைய 
ஷ்யாமளா தேவியான பசுங்கிளி போன்ற அன்னையே ! உன் குளிர்ந்த 
அருளை பெறுதற்காக முன் பிறவியில் பலகோடி தவங்களை செய்தவர்கள் 
இந்த உலகத்தை ஆள்கின்ற அரசுரிமை செல்வத்தை மட்டுமா பெறுவார்கள்?
அறிவை உடைய தேவர்களுக்குரிய இந்த்ர பதவியான செல்வத்தை 
பின் எக்காலத்தும் அழியாத முக்தியான வீட்டுல வாழ்கையும் பெறுவார்கள் 





Saturday, 28 May 2011

பதினான்காம் பாடல்

வந்திப்பவர் உன்னை வானவர் தானவரானவர்கள் !

சிந்திப் பவர்னல் திசை முகர் நாரணர் சிந்தையுள்ளே !

பந்திப் பவரழி யாபரமானந்தர் பாரில் உன்னைச் !

சந்திப்பவர் கெலிதா மெம்பிரா ட்டினின் தண்ணளியே !

<பொருள் >

எம் தாயே ! நின்னை வணங்குபவர்கள் வானவரும் அசுரர்களும் ஆவார்கள் .
உன்னை மனதுள் தியானிப்பவர்கள் நல்லவரான நான் முகனும் 
நாராயணரும் ஆவர்கள் . தம் மனதுள் அன்பினால் பிணித்து இன்பம் 
அடைபவர் அழியாத பரமானந்தா  வடிவுடையா  சிவ பெருமான் 
ஆவார் . இத்துணை சிறப்பும் கொண்ட நின் திருவருள் . உலகத்தில் 
நின்னை  தரிசிப்பவர்க்கு எளிதாகின்றது !
இது என்ன வியப்பு !