வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சி
பேணுதர்க்கெண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியன் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதர்க்கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே!!!!!
ஒளியுடைய நெற்றி பொருந்திய கண்ணை உடையவளை
தேவர்கள் யாவரும் வந்து வணங்கி விரும்பி வழிபடுவதற்கு
நினைத்த எம்பெருமாட்டியை ,அறியாமை உடைய உள்ளத்தில்
காண்பதற்கு நெருங்கியவள் அல்லாத கன்னியை, தரிசித்து அன்பு
கொள்வதற்கு உண்டான எண்ணம்,முன்பிறவியில் நான் செய்த
புண்ணியம் அன்றோ ~~~~~~
Monday, 24 December 2012
Monday, 16 April 2012
முப்பத்து ஒன்பதாம் பாடல் ..
ஆளுகைக்கு உந்தன் அடிதாமரைகளுண்டு அந்தகன்பால் !!
மீளுகைக்கு உன்றன் விழியன் கடையுண்டு மேலிவன்னின்!!
மூளுகைக் கேன்குறை நின்குறையே அன்று முப்புரங்கள் !!
மாளுகைக் கம்பு தொடுத்தனில் லான்பங்கில் வாணுதலே !!
<பொருள்>
மூன்று புறங்களும்அழிவதற்கு திருமாலான அம்பை தொடுத்த
மேரு மலையான வில்லை உடைய சிவபெருமானின் இடபாகத்தில்
விற்று இருக்கின்ற ஒளி உடைய நெற்றி உடயவளே !
என்னை ஆள்வதற்கு உன் திருவடி தாமரைகள் உண்டு !
எமனிடம் செல்லாமல் மீண்டும் உய்வதர்க்கு நின்னுடைய
கடைக்கண் பார்வை உள்ளது இவற்றுடன் தொடர்பு
கொள்ளாதது என் குறையே !உன்னருள் குறையன்று !!
Sunday, 26 February 2012
முப்பத்து எட்டாம் பாடல் ~~~~~
பவள கோடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல் !
தவளத் திருநகையும் துணையாய் எங்கள் சங்கரனை !
துவள பொருதுதுடி இடை சாய்க்கும் துணை முலையாள்!
அவளை பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே!
எல்லா போகங்களிலும் சிறந்த இந்திரா போகங்களை அடைந்து வானவர்க்கு அரசனாய் அமராவதியை
ஆளும் பொருட்டு . பவளம் போன்ற கனிந்த செவ்வாயும் குளுமையான முறுவலும் வெண்மையான பற்களும் , இறைவரான சிவபெருமானை
நெகிழுமாறு மோதி
உடுக்கை போன்ற இடையை தளர செய்யும் இரண்டு கொங்கைகளை உடைய அபிராமி அன்னையை வணங்குவீராக ..
பாடல் முப்பது ஏழு ...
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலமன்ன!
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விடவரவின்!
பைக்கே அணிவது பன்மணி கோவையும் பட்டுமெட்டு!
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே ..!
<பொருள் >
எட்டு திசையையுமே தன ஆடையாய் அணிந்து கொண்ட இறைவனின் இடபாகத்தை சேர்ந்து எழுந்தருளியுள்ள தாய் அபிராமி .
தன் கையில் அணிந்து இருப்பவை கரும்பும் மலர்களும் ஆகும் . தாமரை மலர்போன்ற உடலில் அணிவது தூய வெண்மையான
முத்து மாலை . நஞ்சை உடைய பாம்பின் படத்தை போன்று இடையில் அணிந்து இருப்பது பல மணிகள் பதித்த கோவையும்
பட்டும் ஆகும் ~~~~
Saturday, 18 February 2012
பாடல் முப்பது ஆறு ~~~~~~~~~~
<பொருள்>
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும் !
மருளே ,மருளில் வரும் தொருளே . என்மனத்து வஞ்சத்து இருளேதும் !
இன்றி ஒளிவெளி யாகி இருக்கும் முன் தன் அருளே தனிகின்றி லேனம்பு !
யாதனத்து அம்பிகையே !!!!!
<பொருள்>
செல்வ பொருளே , அசெல்வதால் நிறைவேறும் இன்பமே ! அறிய இன்பங்களை
துய்ப்பதால் !வரும் மயக்கமே மயக்கத்தின் முடிவில் உண்டாகும் தெளிந்த அறிவே . தாமரையான இருக்கையில் அமர்ந்தவளே , எளியேன் மனதில்
மாயையின் .இருள் சிறிதும் இன்றி , நீங்கிட சுடர் வீசும் பெருவெளியாய்
விளங்கும் நின் திருவருள் எத்தகையது என்று நான் அறியேன் !!!
Wednesday, 8 February 2012
பாடல் முப்பத்தைந்து ~~~~~
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க !
எங்கட் கொரு தவம் எய்தியவா வெண்ணிறேந்தவிண்ணோர் !
தங்கட்கும் ஒரு தவம் எய்துமோ தர்ணகட் கடனுள் !
வெங்கட் பணியணை மேல் துயில் கூறும் விழுபொருளே !
<பொருள் >
மிகுந்த அலைகளை உடைய பாற்கடலில் கொடிய கண்ணை உடைய
ஆதி சேடன் பாம்பை பஞ்சணையாக கொண்டு அறிதுயில் கொள்ளும் பரம்பொருளே ! சிவபெருமானின் திருமுடியில் உள்ள பிறை சந்திரனின்
அணிந்தவரின் மணம் கமழும் நின் சிறிய அடிகளை அடியவரான எம்
தலையில் வைத்து அருள்வாய் ! இங்ஙனம் வைத்து நீ எந்கலூகு அருள
யாம் செய்த ஒப்பற்ற தவம் தான் என்ன ? எண்ணிலா தேவர்களுக்கு கூட
இத்தவம் கிடைக்குமா என்பது ஐயமே !!!
Saturday, 30 July 2011
பாடல் முப்பத்து நான்கு ~~~~~~
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் !
தந்தே பரிவொடு தான்போ இருக்கும் சதுமுகமும் !
பைந்தேன் அலங்கல் பருமணி யாகமும் பாகமும்பொன் !
செந்தேன் மலரு மலர்கதிர் ஞ்சயிரும் திங்களுமே !
<பொருள்>
அபிராமி தன்னிடம் வந்து அடைக்கலம் அடையும் அடியவருக்கு
பொன் உலகபதவியை அன்புடன் தருவாள் ,தந்து , தான் சென்று
நான் முகனின் நான்கு முகங்களிலும் , மற்றும் பசிய தேன்சிந்தும்
துளசிமாலை சூடிய கௌத்துவ மணி அணிந்த திருமாலின் மார்பிலும்
சிவபெருமானின் இடபாகத்திலும் , செந்தேன் சிந்தும் தாமரை மலரிலும்
பரந்த கதிரிகளையுடைய கதிரவனின் ஒலிகய்டையிலும்
திங்களின் குளிர்ச்சியிலும் இருப்பாயாக !
Subscribe to:
Posts (Atom)





