துணையும் தொழு தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்!
பணையும் கொழுந்தும் பத்தி கொண்ட வெறும் பணிமலர்பூங்!
கணையும் கருப்புஞ் சிலையும் பாசாங்குசமும் கையில்!
அணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே !
திரிபுர சுந்தரி நான்கு கைகளிலும் குளிர்ந்த மலர் அம்புகளையும்
கரும்பு வில்லையும் மென்மையான பாசம் அங்குசம் என்பனவற்றையும்
கொண்டு விளங்குகிறாள் . அபெருமட்டியே எனக்கு துணையும்
நான் வணங்கும் தெய்வமும் என்னை பெற்ற தாயும்
வேதமான மரத்தின் கிளையாகவும் . அதன் தளிராகவும்
பொருந்திய வேராகவும் விளங்குகிறாள் . இதனை நான் அறிந்து கொண்டேன் !