Saturday 30 July 2011

பாடல் முப்பத்து நான்கு ~~~~~~

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் !

தந்தே பரிவொடு தான்போ இருக்கும் சதுமுகமும் !

பைந்தேன் அலங்கல் பருமணி யாகமும் பாகமும்பொன் !

செந்தேன் மலரு மலர்கதிர் ஞ்சயிரும் திங்களுமே !

<பொருள்>
அபிராமி தன்னிடம் வந்து அடைக்கலம் அடையும் அடியவருக்கு 
பொன் உலகபதவியை அன்புடன் தருவாள் ,தந்து , தான் சென்று 
நான் முகனின் நான்கு முகங்களிலும் , மற்றும் பசிய தேன்சிந்தும் 
துளசிமாலை சூடிய கௌத்துவ மணி அணிந்த திருமாலின் மார்பிலும் 
சிவபெருமானின் இடபாகத்திலும் , செந்தேன் சிந்தும் தாமரை மலரிலும் 
பரந்த கதிரிகளையுடைய கதிரவனின் ஒலிகய்டையிலும் 
திங்களின் குளிர்ச்சியிலும் இருப்பாயாக ! 


பாடல் முப்பத்து மூன்று ~~~~~~

இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க !

அழைக்கும் பொழுது வந்து அஞ்சேல் என்பாய் அத்தர் சித்தமெல்லாம் !

குழைக்கும் களப குளிமுளையாமலை கோமளமே !

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே !

<பொருள்>
எம்பெருமானின் உள்ளமானதை உருக செய்யும் சந்தன கலவை பூச பெற்ற 
குவிந்த கொங்கைகளையுடைய யாமளை என்ற மென்மையானவளே !
விதித்த விதியின் படி கொள்ள வரும் எமன் எனை நடுங்க செய்து 
அழைக்கும் போது , நீ எழுந்தருளி , நீ அஞ்ச வேண்டா : என்று அருளுவாயாக ... நான் துன்பம் அடையும்போது வேறு எவரையும் நாடாமல் , தாயே ! என்று உன்னையே நாடி ஓடிவருகிறேன் !...



Friday 29 July 2011

பாடல் முப்பது இரண்டு ~~~~~~~~~~~~

ஆசை கடலில் அகப்பட்ட அருளற்ற அந்தகன் கை !

பாசத்தில் அல்லற்படவிருந்தேனை நின் பாதம் என்னும் !

வாச கமலம் தலைமேல் வலியா வைத்து ஆண்டு கொண்ட!

நேசத்தை என்சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே !

<பொருள்>
என் இறைவனான சிவபெருமானின் இடபாகத்தில் எழுந்தருளி இருக்கும் 
நல்ல அணிகளை அணிந்த தாயே ! ஆசை என்ற கரை இல்லாத கடலில் துரும்பு போல அகப்பட்டு . அதன் காரணமாக இறப்பு உண்டாகும் காலத்தில் , அருள் இல்லாத எமனின் கைபாகத்தில் அகப்பட்டு துன்ப பட 
இருந்தேன் . இத்தகைய என்னை நின் திருவடி என்ற நறுமணம் உடைய 
தாமரையை வலிய என் தலை மீது சூட்டி அருளி என்னை ஆட்கொண்ட பெருங்கருணையை என்னவென்று சொல்வேன் !!!!!!?


Sunday 24 July 2011

பாடல் முப்பத்து ஒன்று~~~~~

உமையும் உமையொரு பாகனுமே குருவில் வந்திங்கு !

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத் தாரினி எண்ணுதற்கு !

சமயங்களுமில்லை ஈன்றுடுப்பார் ஒரு தாயுமில்லை !

அமையு மமையுறு தோனியர் மேல் வைத்த ஆசையுமே !

< பொருள்>

     உமையும் அந்த உமையை இடபாகத்தில் கொண்ட சிவபெருமானும் ஒரே வடிவில் வந்து ஒன்றுக்கும் பற்று இல்லாத என்னை தன்னிடம் பற்று கொள்ளும்படி செய்து தடுத்தாட் கொண்டனர் . இனி நாம் போய் 
நற்கதி அடைவதற்கு வழி எது என்று ஆராய்வதற்கு சமையங்களும் இல்லை . நான் வீடு பேற்றை அடைய போவது உறுதி .
இனி என்னை ஈன்றெடுக்கும் தாயானவள் இல்லை ஆதலால் .
மூங்கில் போன்ற தோளை உடைய பெண்டிர்மீது வைக்கும் ஆசை இனி போதும் !

Wednesday 20 July 2011

பாடல் முப்பது ~~~~~

அன்றே தடுத்தென்னை ஆண்டு கொண்டாய் கொண்ட 
                                                                    வென்கை !

நன்றே உனக்கினி நானென் செயினும் நடுகடனுள் !

சென்றே விழினும் கரையேற்று கை நின் திருவுளமே !

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே !
<பொருள் >
ஒருவடிவாய் விளங்குபவளே !பல வடிவங்களையும் விளங்குபவளே !
வடிவம் இல்லாத அருவமாய் விளங்குபவளே !என் அன்னையான உமையவளே !
முன்னர் ஒருநாள் எனை தடுதாட்கொண்டாய் ,அவ்வாறு தடுதட்கொண்டதை இல்லை என 
கூறுதல் நியாயமா உனக்கு ?இனி நான் என்ன செய்தாலும் , கடலின் நடுவில் போய் விழுந்தாலும் !
என் குற்றத்தை மறந்து என்னை கரை ஏற்றுதல் உன் திருவுள பாங்கை பொருத்ததாகும் !..... 



 

Sunday 17 July 2011

இருபத்தி ஒன்பதாம் பாடல் ~~~~

சித்தியும் சித்தி தரும் தெய்வமாகி திகழும் பரா !


சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவமுயல்வார் !

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைதெழுந்த!

புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே ! 

.                                                                         <பொருள் >


எட்டு வகை பட்ட சித்தியும் அவற்றினை அளிக்கும் தெய்வமாகி நிற்கும் 
பராசக்தியும் . ஆகி ..அந்த பராசக்தி தன்னிடம் பொருந்த செய்துள்ள சிவமும் 
தவத்தை இயற்றுபவர் அடையும் முக்தி இன்பமும் , முக்தியை பெறுவதற்கு 
மூலமும் , அந்த முலத்தை அறியும் அறிவும் . இவை எல்லாமுமாக இருப்பவள் 
அறிவில் நின்று பாதுகாக்கும் திருப்புற சுந்தரி நாம் எல்லோரையும் காக்கட்டும் ..




Thursday 14 July 2011

இருபத்தி எட்டாம் பாடல்~~~~~

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் !


புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர்த்தாள் !

அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியவரசும் !

செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே ! 
<பொருள் >

காவியத்திலும் கவிதையிலும் வரும்,, சொல்லும் அதன் பொருளும் போன்று 
என்றும் இணைபிரியாது ஆனந்த கூத்து இயற்றும் உன் துணைவனான சிவபெருமானுடன் ,
பொருந்தியுள்ள நறுமணம் உடைய பூங்கொடி போன்றவளே ,!  புதிய மலரை போன்று 
எபோதும் உள்ள உன் திருவடிகளை அல்லும் பகலும் தொழும் அடியவர்களுக்கு ,
பகைவர்களால் அழிவு வராத அரச செல்வமும் பயன் தரும் முறையில் செல்லும் 
தவ வாழ்வும் இறுதியில் சிவலோக பதவியும் கிடைக்க பெறும்!





Saturday 2 July 2011

இருபத்தி ஏழாம் பாடல் ~~~~~

உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகுமன்பு!

படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணிஎனக்கே !

அடைத்தனை நெஞ்சதழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்!

துடைத்தனை சுந்தரி நின்னருளேது என்று சொல்லுவதே !

<பொருள்>

பேரழகு உடையவளே ! வஞ்சகமாக யான் அறியாமல் என்னை துன்புறுத்தும் 
பிறவி குவியலை அழித்தாய் . அதற்ககு முன் உள்ளம் உருகும் அன்பை அடியேன் பெறும்படி செய்தாய் ! நின் தாமரை மலர் போன்ற திருவடிகளை 
எளியேன் சூடி கொள்ளும் படியான பணியை எனக்கு அருளினாய் 
என் மனதில் உள்ள அழுக்கை எல்லாம் நின் அருள் என்ற தூய்மையான
 நீரால் கழுவினாய் தூய்மை செய்தாய் ! இவளவுக்கும் காரணமான உனதருளை என்னவென்று கூறுவது!.................