சென்னியது உன்பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே !
மன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின்னடி யாருடன் கூடி முறைமுறையே !
பன்னிய தென்று முன் தன்பரமாகம பத்ததியே !
பொருள்
செந்நிறமான திருமேனி உடைய பெருமாட்டியே ! அடியேனின் தலை மீது பொருந்தி இருப்பது நின் அழகிய திருவடி தாமரை மலர் !
என மனதுள் பொருந்தி இருப்பது உன் தெய்வ தன்மை பொருந்திய மந்திரம்
உன்னையே தியானம் செய்து வாழும் அடியாருடன் !
ஒன்று கூடி முறை முறையாக பாராயணம் செய்பவை நின் மேலான
ஆகம நெறிகளாகும்!....