Tuesday 26 April 2011

மூன்றாம் பாடல்....

அறிந்தேன் எவரும் அறிய மறையை அறிந்து கொண்டு .

செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப.
 
பிறிந்தேன் என் அன்பர் பெருமை என்னாத கரும நெஞ்சால் .

மறிந்தே விழு நர குக்குற வாய மனிதரையே !

பொருள் 
திரு மகளாய் விளங்குபவளே ! வேறு எவரும் அறியாத ரகசியத்தை 
நான் அறிந்து கொண்டேன் . அங்ஙனம் நான் அறிந்து கொண்டு 
நின் திருவடியை அடைக்கலமாக நான் அடைந்தேன் .
நின் அடியாரின் பெருமையை அறிந்து கொள்ளாத
தீவினை உடைய உள்ளம் காரணமாக நரகத்தில் விழும் ,
தொடர்புடைய மனிதரை கண்டு அஞ்சி விலகினேன் !