Sunday 24 July 2011

பாடல் முப்பத்து ஒன்று~~~~~

உமையும் உமையொரு பாகனுமே குருவில் வந்திங்கு !

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத் தாரினி எண்ணுதற்கு !

சமயங்களுமில்லை ஈன்றுடுப்பார் ஒரு தாயுமில்லை !

அமையு மமையுறு தோனியர் மேல் வைத்த ஆசையுமே !

< பொருள்>

     உமையும் அந்த உமையை இடபாகத்தில் கொண்ட சிவபெருமானும் ஒரே வடிவில் வந்து ஒன்றுக்கும் பற்று இல்லாத என்னை தன்னிடம் பற்று கொள்ளும்படி செய்து தடுத்தாட் கொண்டனர் . இனி நாம் போய் 
நற்கதி அடைவதற்கு வழி எது என்று ஆராய்வதற்கு சமையங்களும் இல்லை . நான் வீடு பேற்றை அடைய போவது உறுதி .
இனி என்னை ஈன்றெடுக்கும் தாயானவள் இல்லை ஆதலால் .
மூங்கில் போன்ற தோளை உடைய பெண்டிர்மீது வைக்கும் ஆசை இனி போதும் !