மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னி!
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார்சடை மேல்!
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரிதியும் படைத்த!
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே !
பொருள்
மனிதர் தேவர் இறவாத ஸ்ரிஞ்சீவி தன்மையுடைய முனிவர்கள்
நெருங்கி வந்து தலை வணங்கும் சிவந்த அடிகளை உடைய
கோமள வல்லியே ! கொன்றை மாலை சூடிய நீண்ட ஜடை மீது
குளிர்ந்த இளம்பிறை சந்திரனும் , பாம்பும் , கங்கையும் ,
ஆகிய வற்றை அணிந்த தூயவரான சிவா பெருமானும்
நீயும் . என் மனதுள் வந்து தங்கி அருள்வீராக !