சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் !
வந்தரி சிந்துர வண்ணத்தினால் மகிடன் தலைமேல் !
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்!
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என்கருதனவே !
<பொருள் >
பேரழகி , எம் தந்தையான சிவபெருமானின் தேவி , என் பாசமான
விலங்கை எல்லாம் தன்னிடம் உள்ள அருளால் எழுந்தருளி வந்து
அழிக்கும் சிந்துரம் போன்ற சிவந்த நிறம் உடையவள் , மகிஷாசுரனின்
தலை மீது நிற்கும் அந்தரி ,நீல நிறம் கொண்டவள் , எக்காலத்தும்
அழிவில்லா கன்னி தன்மை கொண்டவள் , நான்முகனின் கபாலத்தை
தங்கிய திருகை கொண்டவள் ஆகிய அபிராமி அம்மையின் தாமரை
மலர் போன்ற திருவடிகள் என்றும் என் உள்ளத்தில் உள்ளன !